மேலும் அறிய

அரசு துறைமுகங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி - ஹெச்.எம்.எஸ் குற்றச்சாட்டு

சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அகில இந்திய துறைமுகம் மற்றும் கப்பல் தொழிலாளர் சம்மேளனம் (எச்.எம்.எஸ்) சார்பில் கோரிக்கை விளக்க சிறப்பு கூட்டம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக விருந்தினர் மாளிகை கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் பி.எம்.முகம்மது ஹனீப் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் தாமஸ் செபாஸ்டின், தூத்துக்குடி பொதுச்செயலாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


அரசு துறைமுகங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி - ஹெச்.எம்.எஸ் குற்றச்சாட்டு

கூட்டத்தில் துறைமுக தொழிலாளர்களுக்கு 01.01.2022 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு தொடர்பாக, ஊதிய உயர்வு குழு அமைக்கப்பட்டு இதுவரை ஒரே ஒரு கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. எனவே, ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை விரைவாக முடித்து, ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும். அதுபோல 2021- 2022-ம் ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தையை விரைவாக நடத்த வேண்டும். துறைமுகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


அரசு துறைமுகங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி - ஹெச்.எம்.எஸ் குற்றச்சாட்டு

தொடர்ந்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் முகம்மது ஹனீப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், “துறைமுக தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களை உடனடியாக அழைத்து பேசி ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். அதபோல 2021- 2022-ம் ஆண்டுக்கான போனஸ் குறித்த பேச்சுவார்த்தையையும் விரைவாக தொடங்க வேண்டும். துறைமுகங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அதானி குழுமத்தின் தனியார் துறைமுகங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இதனால் துறைமுக துறையில், அதானி குழுமம் ஏகோபத்திய ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால் அரசு துறைமுகங்கள், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு துறைமுகங்களை ஒழிக்க மத்திய அரசு முயன்று வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.


அரசு துறைமுகங்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி - ஹெச்.எம்.எஸ் குற்றச்சாட்டு

சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு, குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், துறைமுகங்களில் உபரியாக உள்ள நிதியை கொண்டு இந்த திட்டத்தை நிறைவேற்றுவதை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த திட்டத்துக்கு என்று பட்ஜெட்டில் தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய பட்ஜெட்டில் துறைமுகங்களின் வளர்ச்சிக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை. மாறாக துறைமுக சொத்துக்களை விற்பனை செய்வதற்கான அறிவிப்புகள் தான் இடம் பெற்று உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் முக்கியமான திட்டமான வெளித்துறைமுக விரிவாக்க திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஊதிய உயர்வு, போனஸ் பேச்சுவார்த்தை உள்ளிட்ட துறைமுக தொழிலாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மற்ற தொழிற்சங்கங்களுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களை நடத்துவோம்” என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Train: இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
இனி ரயிலில் கூட்ட நெரிசல் இருக்காது.. பயணிகளுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே துறை
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Rain Alert: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்: இன்று மழை வருமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Embed widget