மேலும் அறிய

‛நல்லா... எலும்புக் கறியா எடுத்து சாப்புடுயா...’ நல்லுறவுக்காக மாணவர்களுக்கு கறி விருந்து அளித்த ஆசிரியர்கள்!

மாணவர்கள்-ஆசிரியர் மோதல் செய்திகளை பார்த்து, படித்த நமக்கு இது உண்மையில் ஆறுதலான செய்தி தான்.

ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்லுறவைப் பேணும் வகையில்  திருச்செந்தூர் அருகிலுள்ள கீழநாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு  கறி விருந்து வைத்து அசத்தியுள்ளனர். 


‛நல்லா... எலும்புக் கறியா எடுத்து சாப்புடுயா...’ நல்லுறவுக்காக மாணவர்களுக்கு கறி விருந்து அளித்த ஆசிரியர்கள்!

தமிழகத்தில் மாணவர்களுக்கிடையே மட்டுமன்றி  ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே அவ்வப்போது முட்டள்களும் மோதல்களும் இருந்த வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களாக ஆசிரியர்களை மாணவர்கள் தாக்க முயல்வதும்,  ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் செயல்களும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில்  பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட உள்ளது. 


‛நல்லா... எலும்புக் கறியா எடுத்து சாப்புடுயா...’ நல்லுறவுக்காக மாணவர்களுக்கு கறி விருந்து அளித்த ஆசிரியர்கள்!

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே நல்லுறவை பேணும் வகையில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கறி விருந்து வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. திருச்செந்தூர் அருகிலுள்ள கீழ நாலு மூலை கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள் இங்கு ஆறு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில்  கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள்  நடைபெற்று நிலையில் மாணவர்கள் ஒருவிதமான மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர். 


‛நல்லா... எலும்புக் கறியா எடுத்து சாப்புடுயா...’ நல்லுறவுக்காக மாணவர்களுக்கு கறி விருந்து அளித்த ஆசிரியர்கள்!

இந்தநிலையில் தற்போது தேர்வுகள் நடைபெற்றுவரும் நிலையில் கோடை விடுமுறையை கவனத்தில் கொண்டும்,  மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும்,  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும்  வகையிலும் பள்ளி தலைமை ஆசிரியை இந்திராணி தலைமையில்  ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கறி விருந்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.  


‛நல்லா... எலும்புக் கறியா எடுத்து சாப்புடுயா...’ நல்லுறவுக்காக மாணவர்களுக்கு கறி விருந்து அளித்த ஆசிரியர்கள்!

அந்த வகையில் இன்று பள்ளியில் பயிலக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆசிரியர் சார்பில் கறி விருந்து வைக்கப்பட்டது. ஆசிரியர்களின் இந்த திடீர் கறி விருந்தினால் திக்குமுக்காடிப்போன மாணவர்கள் மகிழ்ச்சியாக கறி விருந்தினை சுவைத்து உண்டனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும்  கீழநாலுமூலைக்கிணறு ஊர் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கீழ நாலுமூலைக்கிணறு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். சுமார்  60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் இந்தப் பள்ளியில் ஐந்து வகுப்பறை கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் மட்டுமே  உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டிடம் பழுது காரணமாக பயன்பாட்டில் இல்லாத  பழமையான பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது.  தொடர்ந்து நான்கு வகுப்பறை கட்டிடங்கள் இருந்த நிலையில்   இரண்டு பழமையான கட்டிடங்கள் மிகவும் சேதமாகி மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வந்துள்ளது.  இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த கனமழையினால் இரண்டு பள்ளி கட்டிடங்களில்  முழுவதுமாக  மழைநீர் ஒழுகி மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.   இதனால் மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து கல்வி பயில முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து  உடனடியாக மழைநீர் ஒழுகக்கூடிய கட்டிடத்தையும்,  பழுதடைந்த கட்டிடங்களையும் அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள்  அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் தங்கள் பள்ளியில் பயிலக் கூடிய தங்கள் பகுதி மாணவர்களின் பயன்பாட்டிற்காக அதவா தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன்  ஊர் பொது  மக்களே  தங்களின் சொந்த முயற்சியில் நிதி திரட்டி ரூபாய் 3 லட்சம் மதிப்பில் தகரத்தால் ஆன மூன்று வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Opinion Poll 2026: ஆட்சியைப் பிடிக்கும் அதிமுக; கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் யார் யார்? பரபரப்பு கருத்துக்கணிப்பு முடிவுகள்!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
திறந்து 1 ஆண்டுகளே ஆன நிலையில் விரிசல்! சிதம்பரம் அருகே தேசிய நெடுஞ்சாலைப் பாலம் மூடல்,,,வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேருக்கும் மரண தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
’’கே.வி. பள்ளிகளில் தமிழ் இல்லையா? திமுகவுக்கு ஏன் இந்த வேல?’’ ஆதாரங்களை அடுக்கிய அண்ணாமலை
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Rain Alert: சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு- எப்போ வரை? சர்ப்ரைஸ் செய்த வானிலை மையம்
Seeman:
Seeman: "சீமான் - பாலா நட்பு அனைவருக்கும் பாடம்" மேடையிலே நெகிழ்ந்த சிங்கம்புலி!
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
TN Election 2026: ஓரங்கட்டப்பட்ட பிராமின்கள் - ஒருவருக்கு கூட சீட் தராத BJP, ADMK, DMK - 35 ஆண்டுகளில் முதல்முறை
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
RCB: ஆர்சிபி ரசிகர்கள் மறக்கவே மறக்காத 2 நோ பால்! எப்போ நினைத்தாலும் இனிக்கும்!
Embed widget