மேலும் அறிய

Thoothukudi: ஸ்டெர்லைட்டில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றும் பணி துவங்கியது

ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவது ஆகியவற்றுக்கு அனுமதி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4 லாரிகளில் ஜிப்சம் அகற்றப்பட்டது.


Thoothukudi: ஸ்டெர்லைட்டில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றும் பணி துவங்கியது

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததால், தமிழக அரசு ஆலையை மூடி சீல் வைத்தது. இந்நிலையில், ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையில் மீதம் உள்ள ஜிப்சத்தை அகற்றுவது, ஆலையின் கழிவுக்குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் தடுப்பது, 4-வது கழிவுக்குழியில் கரை உடையாமல் தடுப்பதற்கான சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது, பசுமையை பராமரிப்பது, புதர்களை அகற்றுவது ஆகியவற்றுக்கு அனுமதி அளித்தது.


Thoothukudi: ஸ்டெர்லைட்டில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றும் பணி துவங்கியது

இதையடுத்து அந்த பணிகளை மேற்கொள்வதற்காக உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அமைத்தார். இந்த குழுவினர் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக ஆலை வளாகத்திலும், நுழைவுவாயிலிலும் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் அதனை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டது. கடந்த 21-ந்தேதி ஜிப்சத்தை அகற்றுவதற்கு வசதியாக கனரக வாகனங்கள் மற்றும் 6 பணியாளர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உறைந்த நிலையில் இருந்த ஜிப்சம் கழிவுகளை பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம் உடைத்து லாரிகளில் ஏற்றுவதற்கு தயார் செய்தனர்.


Thoothukudi: ஸ்டெர்லைட்டில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றும் பணி துவங்கியது

தொடர்ந்து லாரிகள் மூலம் ஜிப்சம் வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக உதவி ஆட்சியர் கவுரவ்குமார் தலைமையிலான 9 பேர் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்கு வந்தனர். அவர்கள் முன்னிலையில் 4 லாரிகள் ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டன. அந்த லாரிகளில் ஜிப்சம் கழிவுகள் ஏற்றப்பட்டு நெல்லை, விருதுநகரில் உள்ள சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.


Thoothukudi: ஸ்டெர்லைட்டில் இருந்து ஜிப்சம் கழிவுகளை வெளியேற்றும் பணி துவங்கியது

ஆலையின் உள்ளே செல்லும் வாகனங்கள், ஆலையில் இருந்து எடுத்து செல்லப்படும் பொருட்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அதற்காக தனியாக வைக்கப்பட்டு உள்ள பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டன.மேலும் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கி இருப்பதால் ஆலையின் நுழைவுவாயில் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளிலும் 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தலைப்பு செய்திகள்

Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget