மேலும் அறிய

ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

காரங்காடு, தனுஷ்கோடி, மணாலி தீவு, குந்துகால் ஆகிய இடங்களில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடந்தது. இதில், செங்கால் நாரை, உல்லான், ஆலா உள்ளிட்ட 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு மழைபெய்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால்  கடந்தாண்டுகளைக் காட்டிலும் சரணாலயங்கள் மற்றும்  நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனையடுத்து பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாக மீண்டும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள கடல் பகுதிகள், சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகள் அக்டோபர்  முதல் மார்ச் வரை சீசன் காலக்கட்டத்தில் வருகின்றன.

இவை இனப்பெருக்கம் செய்து மீண்டும் சொந்த நாடுகளுக்கு  திரும்பி செல்கின்றன. இந்தாண்டு சீசனை முன்னிட்டு, கடல்பரப்புகள், நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனை அடுத்து ராமநாதபுரம்  வன உயிரின காப்பகம் சார்பில் கடந்த  ஜனவரி  28,29 ஆகிய தேதிகளில் காரங்காடு, தனுஷ்கோடி, மணாலி தீவு, குந்துகால் ஆகிய இடங்களில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடந்தது. இதில், செங்கால் நாரை, உல்லான், ஆலா உள்ளிட்ட 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன.

ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

இதனை தொடர்ந்து, இந்த மாதம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் வனஉயிரினக்காப்பாளர் பகான் சக்தீஸ் சுதாகர், ரேஞ்சர் ஜெபஸ் மேற்பார்வையில், நீர்நிலைகளில் இரண்டாம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தேர்த்தங்கால், காஞ்சிரங்குளம், சித்திரக்குடி, சக்கரக்கோட்டை, மேல, கீழச்செல்வனூர், உத்திரகோசமங்கை, மல்லல், ராமநாதபுரம் பெரியகண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் ஆகிய இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.


ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

இந்த பறவைகள்  கணக்கெடுப்பின்போது 50 பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் சரணாலய பகுதியினை காட்டிலும் சரணாலயத்திற்கு வெளிப்பகுதியிலும் அதிக அளவில் பறவைகள்  இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும்,  இந்த கணக்கெடுப்பில் சிக்கல் பகுதியில் உள்ள சிக்கல் கண்மாயில் சுமார் 240 பூநாரை, (பிளமிங்கோ) பறவைகள் காணப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே போல உத்தரகோசமங்கை கண்மாய் மல்லல் கண்மாய் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்களிலும் அதிகளவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

பறவைகள் சரணாலய கண்மாய்களில் சுமார் 75 சதவீதத்திற்கு நீர் நிரம்பி உள்ளதால் பறவைகள் இரண்டு முறை மற்றும் சில பறவைகள் மூன்று முறை இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பில் மேலும் சுமார் 120 இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிக அளவில் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் மற்றும் கொக்குகள் காணப்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் முடிவில், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது கடந்த ஐந்து வருடங்களை காட்டிலும் இந்த ஆண்டு மிக அதிக பறவைகள் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
Embed widget