மேலும் அறிய

ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

காரங்காடு, தனுஷ்கோடி, மணாலி தீவு, குந்துகால் ஆகிய இடங்களில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடந்தது. இதில், செங்கால் நாரை, உல்லான், ஆலா உள்ளிட்ட 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன

ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு மழைபெய்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால்  கடந்தாண்டுகளைக் காட்டிலும் சரணாலயங்கள் மற்றும்  நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனையடுத்து பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் இரண்டாம் கட்டமாக மீண்டும் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. மாவட்டத்திலுள்ள கடல் பகுதிகள், சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகள் அக்டோபர்  முதல் மார்ச் வரை சீசன் காலக்கட்டத்தில் வருகின்றன.

இவை இனப்பெருக்கம் செய்து மீண்டும் சொந்த நாடுகளுக்கு  திரும்பி செல்கின்றன. இந்தாண்டு சீசனை முன்னிட்டு, கடல்பரப்புகள், நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனை அடுத்து ராமநாதபுரம்  வன உயிரின காப்பகம் சார்பில் கடந்த  ஜனவரி  28,29 ஆகிய தேதிகளில் காரங்காடு, தனுஷ்கோடி, மணாலி தீவு, குந்துகால் ஆகிய இடங்களில் முதல்கட்ட பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடந்தது. இதில், செங்கால் நாரை, உல்லான், ஆலா உள்ளிட்ட 27ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வந்திருந்தன.

ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

இதனை தொடர்ந்து, இந்த மாதம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் வனஉயிரினக்காப்பாளர் பகான் சக்தீஸ் சுதாகர், ரேஞ்சர் ஜெபஸ் மேற்பார்வையில், நீர்நிலைகளில் இரண்டாம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தேர்த்தங்கால், காஞ்சிரங்குளம், சித்திரக்குடி, சக்கரக்கோட்டை, மேல, கீழச்செல்வனூர், உத்திரகோசமங்கை, மல்லல், ராமநாதபுரம் பெரியகண்மாய், ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் ஆகிய இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.


ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

இந்த பறவைகள்  கணக்கெடுப்பின்போது 50 பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டனர். இதில் சரணாலய பகுதியினை காட்டிலும் சரணாலயத்திற்கு வெளிப்பகுதியிலும் அதிக அளவில் பறவைகள்  இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும்,  இந்த கணக்கெடுப்பில் சிக்கல் பகுதியில் உள்ள சிக்கல் கண்மாயில் சுமார் 240 பூநாரை, (பிளமிங்கோ) பறவைகள் காணப்பட்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதே போல உத்தரகோசமங்கை கண்மாய் மல்லல் கண்மாய் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்களிலும் அதிகளவில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


ராமநாதபுரத்திற்கு படையெடுத்த 25,000 பறவைகள் - கடந்த 5ஆண்டுகளை காட்டிலும் பறவைகள் வருகை அதிகரிப்பு

பறவைகள் சரணாலய கண்மாய்களில் சுமார் 75 சதவீதத்திற்கு நீர் நிரம்பி உள்ளதால் பறவைகள் இரண்டு முறை மற்றும் சில பறவைகள் மூன்று முறை இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கணக்கெடுப்பில் மேலும் சுமார் 120 இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிக அளவில் நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் மற்றும் கொக்குகள் காணப்பட்டது. மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் முடிவில், சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது கடந்த ஐந்து வருடங்களை காட்டிலும் இந்த ஆண்டு மிக அதிக பறவைகள் வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Embed widget