மேலும் அறிய

Crime : தந்தையோடு தகராறு செய்தவர்களை சரமாரியாக வெட்டிய மகன்! போலீஸ் வலைவீச்சு

”இரு தரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில் தந்தையை தகாத வார்த்தையால் பேசிய இருவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்”

திருநெல்வேலி அருகே தந்தையுடன் தகராறு செய்தவர்களை மகன் குடிபோதையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாநகர் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் சம்பக்கடை தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்(55) மற்றும் கணேசன் (54). இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இந்த சூழலில் இருவரும்  நேற்று அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கங்கை முருகன் என்பவர் சுப்பிரமணியனுடன் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கேயே இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் மூன்று பேரும் டாஸ்மாக் கடையில் இருந்து கிளம்பி வீட்டுற்கு புறப்பட்டு உள்ளனர். 

Crime : தந்தையோடு தகராறு செய்தவர்களை சரமாரியாக வெட்டிய மகன்! போலீஸ் வலைவீச்சு

அப்போது பரிசுத்த ஆவி தெருவில் வைத்து மீண்டும் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின் போது சுப்பிமணியன் மற்றும் கணேசன் ஆகிய இருவரும் சேர்ந்து கங்கை முருகனை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அந்த நேரத்தில் கங்கை முருகனின் மகன் மணிகண்டன் அந்த பகுதிக்கு வந்துள்ளார். இருவரும் சண்டையில் ஈடுபட்டதை கவனித்த கங்கை முருகனின் மகன் மணிகண்டன்(25) திடீரனெ தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசன் மற்றும் சுப்பிரமணியனை சரமாரியாக வெட்டி உள்ளனர். பின்னர் அங்கிருந்து  தப்பி ஓடியுள்ளார். இதில் இருவருக்கும் தலை, வயிறு, கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரத்த வெள்ளத்தில் இருவரும் கீழே விழுந்து கிடந்துள்ளனர். மேலும் மணிகண்டனும் ஏற்கனவே அதிக மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


Crime : தந்தையோடு தகராறு செய்தவர்களை சரமாரியாக வெட்டிய மகன்! போலீஸ் வலைவீச்சு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை காவல் துறையினர்  வெட்டுப்பட்ட சுப்பிரமணியம் மற்றும் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில் கணேசனுக்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய மணிகண்டனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மணிகண்டனின் தந்தை கங்கை முருகனை மட்டும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட வாய்தகராறு  அரிவாளால் வெட்டில் முடிந்துள்ளது, இச்சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget