மேலும் அறிய

தென்காசி: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு

’’இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தலையில் தலை கவசம் அணியவில்லை என்பது தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என விபத்து நடை பெற்ற பகுதிக்கு அருகில் உள்ளவர்கள் கூறுகின்றனர்’’

தென்காசி மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லை பகுதியான புளியரையைச் சேர்ந்தவர், கண்ணன் என்பவரது மகன் சதாசிவம் (19). இதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சுரேஷ் குமார் (24). இவர்கள் இருவரும் இன்று தங்களது இரு சக்கர வாகனத்தில் புளியரையில் இருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது மேல கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவரது மகன் நாகலிங்கம் (19) என்பவரும் மற்றும் காளி பாண்டியன் என்பவரது மகன் கார்த்திக் (26) என்பவரும் வேறு ஒரு இரு சக்கர வாகனத்தில் மேல கடையநல்லூரில் இருந்து புளியரை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது கட்டளை குடியிருப்பு பகுதியில் இவர்கள் நால்வரும் சென்ற இரண்டு இரு சக்கர வாகனங்களும் எதிர் பாரா விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின. இதில் பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சதா சிவம், சுரேஷ் குமார், நாகலிங்கம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினரும் சாலையில் சென்றவர்களும் புளியரை காவல்துறையினர் மற்றும் அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த புளியரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து உயிரிழந்து சதா சிவம், சுரேஷ் குமார், நாக லிங்கம் ஆகிய மூவரின் பிரேதங்களையும் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


தென்காசி: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு

மேலும் படுகாயங்களுடன் சாலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த கார்த்திக் தென்காசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து புளியரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களும் தலையில் தலை கவசம் அணியவில்லை என்பது தான் இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என விபத்து நடை பெற்ற பகுதிக்கு அருகில் உள்ளவர்கள் கூறுகின்றனர். அது மட்டுமின்றி இந்திய அளவில் அரங்கேறும் இரு சக்கர வாகன விபத்துகளில் உயிரிழக்க கூடிய 100 சதவீத வாகன ஓட்டிகளில் 60 சதவீதம் பேர் இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் இன்றி பயனித்ததால் தான் உயிரிழந்ததாக கருத்து கணிப்புகள் கிடைத்துள்ளன.


தென்காசி: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழப்பு

6000 ரூபாய் அலைபேசிக்கு 500 ரூபாய்க்கு உறை போட்டு பயன்படுத்தும் நாம் நம் உயிரின் மதிப்பு அறிந்து இரு சக்கர வாகனம் ஓட்டும் போது தலை கவசம் அணிய மறுப்பது ஏனோ...? தலை கவசம், நம் உயிர் கவசம்

தலைப்பு செய்திகள்

CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
கோயிலுக்கு எந்த VIP வந்தாலும் கண்டிப்பாக எனக்கு சொல்லனும்.! அமைச்சர் ரமேஷ் போட்ட உத்தரவால் பரபரப்பு
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Embed widget