மேலும் அறிய

தென்காசி: கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா!!!

”இங்கு சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை சுட்டிக் காட்டும்  திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி கொடுப்பார்”

சங்கரன்கோவில் வரலாறு: 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவில் தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சிவஸ்தலம் ஆகும். இங்கு புராணப்படி, இங்குள்ள அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு  நாக மன்னர்களிடையே சண்டை மூண்டுள்ளது. அப்போது சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும், பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருவரும் அம்மனிடம் சென்று முறையிட்டுள்ளனர்.  அப்போது இவர்கள் இருவர் மட்டுமின்றி உலக மக்களும் இறவனின் முழு உருவத்தை உணர வேண்டும் என்று அம்மன் சிவபெருமானிடம் வேண்டியுள்ளார். அம்மனின் வேண்டுகோளுக்கிணங்க சிவன், சங்கரநாராயணராக காட்சியளித்துள்ளார். அதாவது (சங்கரன் - சிவன், நராயணன் - திருமால் ) கடவுள் இருவருமே சமம் என்பதை உணர்த்தும் வகையிலும், அன்பினாலும், தியாகத்தினலும் மட்டுமே கடவுளை அடைய முடியும் என சிவனும் திருமாலும் இணைந்த சங்கர நாராயணராக தோன்றினார். அதன்பின்னர்  நாகர் இருவரும் அம்மனுடன் குடியிருந்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர்  என்பது வரலாறு.  

தென்காசி: கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா!!!

ஆடித்தபசு:

புகழ்பெற்ற இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தபசு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கர நாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்குக் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.  மேலும் இக்கோவிலில் அமைந்துள்ள சிரீ சக்கர பீடத்தில் நோயாளிகள், தீய சக்திகளால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், மன நலமற்றவர்கள் ஆகியோரை அதில் அமர வைத்தால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.  இங்கு சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை சுட்டிக் காட்டும்  திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி கொடுப்பார்.


தென்காசி: கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா!!!

திருவிழாவும், பாதுகாப்பு ஏற்பாடும்:

இத்திருவிழா இன்று காலை சரியாக   5.00    மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் கோமதி அம்மன் காலையில் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். வரும்  19 ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா  வரும் 21ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான பக்தர்கள் தென்மாவட்டங்களில் இருந்து கலந்து கொள்வர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவுன்படி சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர் மற்றும் காவல்துறையினர் செய்து வருகின்றனர். மேலும் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக நகரின் முக்கிய பகுதிகளில் 50 க்கும் மேற்ப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொடியேற்று விழாவில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் துரை வையாபுரி, ராணிஸ்ரீ குமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜா, நகர் மன்ற தலைவி உமாமகேஸ்வரி, அறங்காவலர் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
அதிமுக ஆர்ப்பாட்டம்: திமுக அரசின் மடிக்கணினி திட்டம் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு- பாரபட்சமின்றி வழங்க கோரிக்கை!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: ஒன்றுக்கு மட்டுமே அனுமதி!
Embed widget