![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
"எந்த காலத்திலும் திராவிட மாடலை உயர்த்தி பிடிப்போமே தவிர மணிப்பூர் மாடலுக்கு தமிழகத்தில் இடமில்லை" - சுப.வீரபாண்டியன்
எப்போதும் திமுக தான் ஆளுங்கட்சி, அதிமுக தான் எதிர்க்கட்சி, பாஜக உங்களுக்கு இடம் இல்லை.
![suba veerapandian says At any time the Dravidia சுn model will be uplifted and the Manipur model has no place in Tamil Nadu TNN](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/02/509a61a6a269eccc1ccdea34bd56603a1696218712152571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட ஆதித்திராவிட நலக்குழு, மற்றும் சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் நவ்சாத் தலைமையில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சொன்னதை செய்யும் ஆற்றலும், திறமையும் உடையவர் கலைஞர். கலைஞர் மறையவில்லை எங்கள் மு.க.ஸ்டாலினாய் வாழ்கிறார் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளார். காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறர். ஆனால் பாஜக அரசு மாநிலங்களின் உரிமைகளை, பறித்துக் கொண்டு இருக்கிறது. அதில் ஒன்றுதான் நூறுநாள் வேலைத் திட்டம், இந்த திட்டம் வேண்டும் என்று இந்தியா முழுவதும் 1 கோடியே 96 லட்சம் பேர் விரும்புகிறார்கள் என புள்ளிவிபரம் கூறுகிறது. எந்த வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றவில்லை. வறுமையின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் தற்போது முன்னேறி அங்கு ஒரு டலரின் மதிப்பு 79 ஆப்கானிகள், வளர்ந்த நாடு என்று கூறும் இந்தியாவில் ஒரு டாலரின் மதிப்பு 83 ரூபாய் இந்தியாவின் பொருளாதாரத்தை பாஜக பின்னுக்கு தள்ளியுள்ளது. மோடி தொடங்கி அண்ணாமலை வரை பொய்களை மட்டுமே கூறி வருகின்றனர். அதிமுக - பாஜக பிரிந்தது போல் பாவனை காட்டுகிறார்கள். இதற்கு காரணம் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறவேண்டும் என்று. நீங்கள் புரிந்து கொள்ளுங்கள், இஸ்லாமியர்கள் உங்கள் பக்கம் ஒருகாலமும் வரமாட்டார்கள். இஸ்லாமியர்கள் எத்தனை காலம் உறவு எங்களுக்கு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அண்ணா, பெரியார், காமராஜர் காலத்தில் இருந்த பண்பும் , உண்மையும் மிகுந்த அரசியலை இன்று பாஜக சீரழித்து வருகிறது. பாஜக ஆட்சியில் 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.
மணிப்பூரில் 150 நாட்களாக கலவரம் நடக்கிறது. ஆனால் அங்கு செல்ல பிரதமருக்கு நேரமில்லை, அதுகுறித்து இதுவரை பேசவும் இல்லை, மணிப்பூரில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. 171 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக கூறுகிறார்கள். இதில் 95 பேரின் சடலங்களை பெற யாரும் முன்வரவில்லை, காரணம் அவரின் உறவினர் என்று கொலை செய்யக் கூடும் என்ற அச்சத்தில் தான். மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. எந்த காலத்திலும் திராவிட மாடலை உயர்த்தி பிடிப்போமே தவிர மணிப்பூர் மாடலுக்கு தமிழகத்தில் இடமில்லை, தமிழகத்தில் என்ன முயற்சி செய்தாலும் தாமரை ஒரு இடத்தில் கூட மலராது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வலுவான வெற்றியை பெற்றுத்தரும் நம்பிக்கையை இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளது. 2024-ல் இந்தியா வெல்லும், பாஜகவிற்கு இனி இடமில்லை, தமிழகத்திலும் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும்" என தெரிவித்தார். மேலும் எப்போதும் திமுக தான் ஆளுங்கட்சி, அதிமுக தான் எதிர்க்கட்சி, பாஜக உங்களுக்கு இடம் இல்லை என பேசினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)