மேலும் அறிய

ரசீது பேப்பர் காலியாகிவிடும் - கோவில்பட்டி மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு

கோவில்பட்டியில் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த திடீரென தடை விதிக்கப்பட்டதால் கிராமங்களில் இருந்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து மின்கட்டணம் செலுத்த முடியமால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்தினால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதாக கூறி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த திடீரென தடை விதிக்கப்பட்டதால் கிராமங்களில் இருந்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து மின்கட்டணம் செலுத்த முடியமால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


ரசீது பேப்பர் காலியாகிவிடும் - கோவில்பட்டி மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சார வாரிய அலுவலகத்தில் தான் மின்கட்டணம் செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் மின் கட்டணத்தினை எந்த மின்சார வாரிய அலுவலகத்தில் செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் மின்கட்டணத்தினை செலுத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் இதற்கு என்று தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் மின்சாரவாரிய அலுவலகத்தில் கோவில்பட்டி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வேறு மின்வாரிய அலுவலகத்திற்குட்டப்பட்டவர்களும் கோவில்பட்டி அருகில் இருப்பதால் இங்கு வந்து மின்கட்டணம் செலுத்தி வந்தனர்.


ரசீது பேப்பர் காலியாகிவிடும் - கோவில்பட்டி மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு

இந்நிலையில் இன்று திடீரென கோவில்பட்டி நகரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் மின்கட்டணம் வசூல் செய்யப்படும் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாது என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மின்கட்டணம் செலுத்த வந்த மக்கள் பலரும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். சிலர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்களது உயர் அதிகாரி ஒருவர் வெளியூர் நபர்கள் மின்கட்டணம் செலுத்துவதால் மின்கட்டணம் செலுத்தியதற்கு தரப்படும் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகிறது என்றும், எனவே இன்று முதல் வெளியூர் நபர்களுக்கு மின்கட்டணம் வாங்க கூடாது என்று கூறியுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.  அதுமட்டுமின்றி மின்கட்டணம் கட்டுவதற்கு கடைசி நாள் என்பதால் மின்கட்டணம் செலுத்த வந்த கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.


ரசீது பேப்பர் காலியாகிவிடும் - கோவில்பட்டி மின்சாரவாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் வாங்க மறுப்பு

ஜமீன்தேவர்குளத்தினை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் மனோகரன் என்பவர் கூறுகையில், தங்களுக்கு கலிங்கப்பட்டி மின்சாரவாரியம் என்றால் அங்கு 2 பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை இருப்பதால் அருகில் இருக்ககூடிய கோவில்பட்டி மின்சாரவாரியத்தில் 6 ஆண்டுகளாக தங்களது வங்கிக்கான மின்கட்டணத்தினை செலுத்தி வருவதாகவும், ஆனால் இன்றைக்கு வாங்க மறுத்து விட்டதாகவும், காரணம் கேட்டால் ரசீது பேப்பர் அதிகமாக காலியாகி விடுவதால் வெளியூர் நபர்களுக்கு வாங்க கூடாது என்று அதிகாரிகள் கூறியதாக கூறுகின்றனர். தமிழக அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget