மேலும் அறிய

பாளையங்கோட்டை: இராஜகோபால சுவாமி கோவிலில் 8 ஆண்டுகளுக்கு தயாரான புதிய தேர் வெள்ளோட்டம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ராஜகோபால சுவாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி பிரமோற்சவத்தில் உத்திர நாளில் ரதவீதிகளில் தேர் சுற்றி வர கோலகமாக தேர்திருவிழா நடைபெறும். ஆனால் இக்கோவிலின் கோயிலின் தேர் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.

குறிப்பாக, கடந்த 8 வருடங்களாக பங்குனி பிரம்மோஸ்தவத்தில் தேர் ஓடவில்லை. இதையடுத்து பக்தர்கள் புதிய தேர் செய்ய முடிவு செய்தனர். இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பூர்வாங்க பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு ரூ 54 லட்சம் மதிப்பில் 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் செய்யப்பட்டது.  5 அடுக்கு வேலைப்பாடுகளுடன் திருத்தோ் பணி முடிவடைந்தது.  இந்த நிலையில் வருகிற பங்குனி பிரமோற்சவத்தில் தேர் வலம் வரும் வகையில் தோ் வெள்ளோட்டமானது இன்று நடைபெற்றது.


பாளையங்கோட்டை: இராஜகோபால சுவாமி கோவிலில் 8 ஆண்டுகளுக்கு தயாரான புதிய தேர் வெள்ளோட்டம்

இதற்காக நேற்று மாலை மகா சங்கல்பம் விஷ்வக்ஷேன ஆராதனை, கும்ப ஸ்தாபனம்  கலச திருவாராதனம் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. இன்று அதிகாலையில் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப பூஜை முடிந்ததும் ஹோமங்கள் தொடா்ந்து மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.  திருவோண நட்சத்திரமும், அமிர்தயோகமும் கூடிய மேஷ லக்னத்தில் காலை 9.47 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து வெள்ளோட்டம் தொடங்கியது.  முன்னதாக யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று தேர் ஆவாஹனம் மற்றும்  திருவாராதனம் நடைபெற்றது. ஆன்மீகப் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு ராஜகோபாலன் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். 


பாளையங்கோட்டை: இராஜகோபால சுவாமி கோவிலில் 8 ஆண்டுகளுக்கு தயாரான புதிய தேர் வெள்ளோட்டம்

இத்தேர் விஷ்ணுவுக்கு உரிய ரத லட்சணங்களுடன்  அமைக்கப்பட்டுள்ளதோடு, 12 ஆழ்வார்களின் சிற்பங்கள், தசாவதார சிற்பங்கள், கண்ணன் லீலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. 5 தட்டு அடுக்கு,  அழகிய மர சிற்ப வேலைப்பாடுகள் உடன் அலங்காரம் செய்யப்பட்ட 36 அடி உயர தேர், அதன் 35 டன் எடையால் ராஜகோபால சுவாமி கோவிலை சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் ஆடி அசைந்து வந்த வெள்ளோட்ட காட்சியில் ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

நான்கு ரத வீதிகளிலும் மக்கள் கூட்டம் சூழ தேர் ஆடி அசைந்து வந்த அழகை ரசித்து வணங்கினர். கடந்த 8 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாததால், சாலைகளில் ஓங்கி வளர்ந்திருந்த மர கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டு தேர் தடையின்றி ஓடும் வகையில் மின் வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அதற்கான பணிகளை சிறப்பாக செய்திருந்தார்கள். தேர் வெள்ளோட்டம் முடிந்ததும் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.  இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கோபாலன் கைங்கர்யசபா மற்றும் திருக்கோயில் நிர்வாகத்தினா் சிறப்பாக செய்திருந்தனா்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget