மேலும் அறிய

குடியரசு தினவிழாவை புறக்கணித்த நெல்லை திமுக மாமன்ற உறுப்பினர்கள்- மேயருக்கு மீண்டும் எதிர்ப்பு

மண்டல அலுவலகங்களில் நடந்த குடியரசு தின விழா நிகழ்வுகளில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொண்டது குறிப்பிடதக்கது.

திருநெல்வேலி மாநகராட்சியில் நடந்த குடியரசு தின விழாவில் மேயர் சரவணன் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தார்.மேயர் உடனான மோதல் போக்கு காரணமாக திமுக மாமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கொடியேற்றிய குடியரசு தின விழாவை புறக்கணித்தனர்.


குடியரசு தினவிழாவை புறக்கணித்த நெல்லை திமுக மாமன்ற உறுப்பினர்கள்- மேயருக்கு மீண்டும் எதிர்ப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் 55 உறுப்பினர்கள் உள்ளனர் இதில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியைச் சார்ந்த 51 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் திராவிட முன்னேற்றக் கழகம் 44 உறுப்பினர்களை பெற்றுள்ளது இதில் மேயராக திமுகவைச் சேர்ந்த சரவணன் துணைமேயராக ராஜூவும் செயல்பட்டு வருகின்றனர் இரண்டு ஆண்டுகளாக மேயர் மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது மாமன்ற கூட்டத்திலேயே இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது இதனிடையே கடந்த 12ஆம் தேதி மேயருக்கு எதிராக திமுக மாமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்பு மற்றும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது ஆனால் தலைமையிம் அறிவுறுத்தல்ப்படி திமுக உறுப்பினர்கள் வெளியூர்களுக்கு அழைத்து செல்லப்பட்டதால் யாரும் நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அதனால் மேயர் பதவி தப்பித்தது.


குடியரசு தினவிழாவை புறக்கணித்த நெல்லை திமுக மாமன்ற உறுப்பினர்கள்- மேயருக்கு மீண்டும் எதிர்ப்பு

இந்நிலையில் 75 ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருநெல்வேலி மாநகராட்சியில் ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமையில் துணை மேயர் ராஜூ முன்னிலையில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.


குடியரசு தினவிழாவை புறக்கணித்த நெல்லை திமுக மாமன்ற உறுப்பினர்கள்- மேயருக்கு மீண்டும் எதிர்ப்பு

இந்த நிகழ்வில் திமுக மாமன்ற உறுப்பினர் ஒரே ஒரு நபர் மட்டுமே கலந்து கொண்டார். அதிமுகவை சேர்ந்த மூன்று பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழா கொடியேற்றத்தின் போது மேயர் சரவணன் கொடியேற்றி வைத்த பிறகு அவர் பேசத் துவங்கியதும் அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலைந்து சென்றனர் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவை மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மேயருக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை காட்டியதாக தெரிகிறது தலைமை முயற்சித்த பிறகும் மேயர் மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் முடிவுக்கு வரவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. வரும் 30ஆம் தேதி மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்குப் பிறகு கூட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிலும் மேயர் - மாமன்ற உறுப்பினர்களிடையேயான மோதல் எதிரொலிக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.


குடியரசு தினவிழாவை புறக்கணித்த நெல்லை திமுக மாமன்ற உறுப்பினர்கள்- மேயருக்கு மீண்டும் எதிர்ப்பு

ஆனால் அதே வேலையில் மண்டல அலுவலகங்களில் நடந்த குடியரசு தின விழா நிகழ்வுகளில் திமுக கவுன்சிலர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget