மேலும் அறிய

வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை

திருவிடைமருதூரில்தான் மழைப் பொழிவு அதிகம். இத்தகவலை தஞ்சை பேரிடர் மோலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர்: எப்போ பெய்யும்... எப்போ நிற்கும் என்று தெரியாமல் தஞ்சை மக்களை அல்லாட வைத்து வருகிறது மழை. கடந்த 2 நாட்களாக வருவேன்... வர மாட்டேன் என்று கருமேகங்கள் திரண்டு நின்று மழை வரும் என்று எதிர்பார்த்தால் வராது. கருமேகங்களே இல்லாத போது ஒரு மணி நேரத்திற்கு மழையானது வெளுத்தெடுக்கும். இப்படி மழை மக்களை சுற்றலில் விட்டு  அல்லாட வைத்து வருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கனமழை பெய்தது. ஆரம்பத்தில் லேசான அளவில் பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது.


வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை

தொடர்ந்து 3 மணி நேரம் மழை வெளுத்தெடுத்தது. இதனால் தஞ்சையின் நகர் பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதற்கிடையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் கனமழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் வல்லம், திருவையாறு, பூதலூர், பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. 

இதையும் படிங்க: Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

காலையில் பெய்த மழையால் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர். நேற்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை விட்டு விட்டு பெய்தது. எப்போது பெய்யும், எப்போது நிற்கும் என்று தெரியாத அளவிற்கு திடீர், திடீரென்று பெய்து மக்களை மழை மிரட்டியது. 

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 95.30 மில்லி மீட்டர் மழை பெய்தது. அதன்படி  திருவிடைமருதூரில் 18.90 மி.மீ, கும்பகோணத்தில் 11மி.மீ, தஞ்சாவூரில் 6.50மி.மீ, பாபநாசத்தில் 11.80 மி.மீ,  திருவையாறு 0.60 மி.மீ, பூதலூரில் 3.80 மி.மீ, ஒரத்தநாடு 10.20 மி.மீ, பட்டுக்கோட்டை 17.50 மி.மீ, போராவூரணியில் 15 மி.மீ.  என மொத்தமாக 95.30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.53 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் திருவிடைமருதூரில்தான் மழைப் பொழிவு அதிகம். இத்தகவலை தஞ்சை பேரிடர் மோலாண்மை துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல் இன்றும் அதிகாலை 4 மணியிலிருந்து பூதலூர், வல்லம், ஆலக்குடி, 8.கரம்பை உட்பட பல பகுதிகளில் மழை சாறலாக பெய்து கொண்டே இருந்தது. தஞ்சை மாநகரில் காலை 10 மணியளில் சாரலாக பெய்ய ஆரம்பித்து விட்டு விட்டு பெய்த மழையால் வாகன ஓட்டுனர்கள் நனைந்து கொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. மதியத்தில் ஒரு மணிநேரம் திடீரென்று பெய்த கனமழையை எதிர்பார்க்காத மக்கள் நனைந்து கொண்டே ஒதுங்க இடம் தேடி ஓட்டமாய் ஓடி வேண்டிய நிலை உருவானது. இதுகுறித்து தஞ்சை மாவட்டம் பூதலூர் விவசாயி சுதாகர் கூறியதாவது:

இந்த மழை தற்போதைய சம்பா சாகுபடி பயிர்களுக்கு மிகுந்த உதவிகரமாக இருக்கும். தற்போது பயிர்களுக்கு தண்ணீர் தேவை என்ற நிலையில் இந்த மழை பெரிய அளவில் உதவுகிறது. இதேபோன்று பெய்தால் பயிர்கள் நன்கு செழித்து வளரும். ஆற்றில் தண்ணீர் குறைவாக வருகிறது என்று வருத்தப்பட்ட நிலையில் இந்த மழை எங்களுக்கு கை கொடுத்துள்ளது. பூச்சி தாக்குதல்கள் ஓரிரு இடங்களில் காணப்பட்டாலும் இந்த மழை விவசாயிகளுக்கு மிகுந்த உதவியாகத்தான் உள்ளது என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஓய்வூதிய உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூரில் கவனஈர்ப்பு போராட்டம்
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
ஒரத்தநாட்டில் முதலமைச்சர்' விஜய் பிறந்தநாள் விழா: 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!
சிங்கப்பெண் அதிரடி படையினரிடம் புகார் தெரிவித்த மாணவி: போக்சோவில் கைதான வாலிபர்
சிங்கப்பெண் அதிரடி படையினரிடம் புகார் தெரிவித்த மாணவி: போக்சோவில் கைதான வாலிபர்
ஆபத்தில் காக்கும் ஆபத்சகாயேஸ்வரர்! சுக்ரீவனுக்கு அருள்புரிந்த தென்குரங்காடுதுறை சிவத்தலம்
ஆபத்தில் காக்கும் ஆபத்சகாயேஸ்வரர்! சுக்ரீவனுக்கு அருள்புரிந்த தென்குரங்காடுதுறை சிவத்தலம்

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Thiruma.: ‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
‘தங்க மோதிரம் திட்டம்‘ நிறுத்தப்படுமா.? முதல்வர் விஜய்க்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கைகள்
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
24 மணிநேரம் டைம் ; இல்லைனா போராட்டம் !! த.வெ.க அரசுக்கு திமுக ஆர்.எஸ்.பாரதி கெடு
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
’’கோயபல்ஸ் பிரச்சாரம், அநாகரிகம்’’ அன்பில் மகேஷுக்கு அமைச்சர் விஸ்வநாதன் கடும் எச்சரிக்கை!
Donald Trump: ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நாடாளுமன்றம்; ஈரான் போருக்கு லாக் போட்ட காங்கிரஸ்; என்ன நடந்தது.?
ADMK To TVK : நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
நம்பி வந்த 4 MLA-க்கள்.. அல்வா கொடுத்த விஜய்.? கதறும் அதிமுக மாஜிக்கள்- நடப்பது என்ன?
Chennai Power Cut: சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
சென்னைல ஜூன் 25-ல் (25.06.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை ஏற்படப் போகுது; உங்க ஏரியா இருக்கா.?
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
Tata Sierra EV: டாப் கியரில் டாடா சியரா; ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. ரேஞ்ச், இ.வி. இன்ஜின் கார் ஒப்பீடு!
New Tata Altroz Turbo CNG: நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
நாட்டின் சக்திவாய்ந்த CNG கார்; அதகளப்படுத்தும் டாடா.! சோதனையில் புதிய ஆல்ட்ரோஸ் டர்போ சிஎன்ஜி
Embed widget