மேலும் அறிய

இரவு உணவு வழங்குவதில் அலட்சியம்! தனியார் உணவகத்திற்கு அபராதம் விதிப்பு - நுகர்வோர் நீதிமன்றம்

இரவு உணவு வழங்குவதில் அஜாக்கரதையாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சிந்துபூந்துறை வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் ஹோட்டலில் 27.02.2022 அன்று இரவு பார்சல் புரோட்டா, நெய்ரோஸ்ட் மற்றும் மஸ்ரூம் தோசை ஆகிய உணவு கேட்டு ரூபாய் 484 செலுத்தியுள்ளார். அதற்குரிய ரசீதும் பெற்றுள்ளார்.

இரவு உணவில் அலட்சியம்:

ஆனால் ஒரு மணி நேரமாக காத்திருந்தும் தனியார் ஹோட்டல் பார்சல் வழங்காமல் இருந்துள்ளது. சிவசுப்பிரமணியன் நாகர்கோவிலில் இருந்து  ராமேஸ்வரம் கோயிலுக்கு தரிசனம் செய்ய பேருந்தில் பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார்.  மேலும் இரவு உணவுக்காக தனியார் ஹோட்டல் ஆர்டர் செய்த உணவை வழங்காமல் ஆர்டர் செய்த உணவானது வேறு நபருக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் இட்லி மற்றும் தோசை மட்டுமே உள்ளது. அதனால் உடனே மனுதாரருக்கு பார்சல் தர இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

இரவு முழுவதும் பட்டினி:

சிவசுப்பிரமணியன் பேருந்துக்கு நேரமாகிவிட்டதால் தான் செலுத்திய பணத்தினை திரும்ப கேட்டுள்ளார். அப்போது பணத்தை கொடுப்பதற்கு தனியார் ஹோட்டல் மறுத்து விட்டது. மேலும் சிவசுப்பிரமணியிடம் கொடுக்கப்பட்ட ரசீதில் உணவு டெலிவரி செய்தற்குரிய முத்திரையிடப்படவில்லை என்பதால் வேறு ஒரு நாளில் வந்து பார்சல் வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி விட்ட சிவசுப்பிரமணியம்  இரவு முழுவதும் சாப்பிட முடியாமல் பட்டினியாக ராமேஸ்வரம் சென்றுள்ளார்.

மன உளைச்சல் ஏற்பட்ட சிவ சுப்பிரமணியம் வழக்கறிஞர் பிரம்மா மூலம்  நெல்லை நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில்  வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கினை விசாரணை செய்த ஆணைய தலைவர் கிளாட்ஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர்  மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ₹5000 /- வழக்குச் செலவு ₹2000/-சேர்த்து மொத்தம்  ரூபாய் 7000த்தை தனியார் ஹோட்டல்  சிவ சுப்பிரமணியத்திற்கு வழங்க வேண்டும் எனவும், இதனை ஒரு மாத காலத்திற்குள் வழங்க தவறினால் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இரவு உணவு வழங்குவதில் அலட்சியமாக செயல்பட்ட தனியார் உணவகத்திற்கு  நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget