மேலும் அறிய

Jayakumar Death: பெண்ணுடன் தொடர்பா?... கோணம் மாறுகிறதா..? - விசாரணை வளையத்திற்குள் வந்த ஜெயக்குமாரின் குடும்பம்..!

பல்வேறு வழக்குகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்த சிசிடிவி கேமராக்கள் இந்த சம்பவத்தில் 2 நாட்களாக வேலை செய்யவில்லை என்று சொல்வது மிகப்பெரிய கேள்விகளையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

வழக்கின் தடயங்களும், காவல்துறை விசாரணையும்:

நெல்லை காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரை கடந்த 2 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை என்று மகன் கருத்தையா ஜெப்ரின் மறுநாள்  ஆம் தேதி க்உவரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளிக்கிறார். அதன்பின் 4 ஆம் தேதி ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள அவரது தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டார். அவர் மீட்கப்பட்ட நாள் முதல் பல்வேறு தகவல்களும், அடுத்தத்தடுத்த தடயங்களும் வெளியாகி வருகிறது. இருப்பினும் தற்போது வரை துப்பு துலங்காத நிலையில் காவல்துறையினர் அடுத்தடுத்த நகர்வுகளில் விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். முதலில் ஜெயக்குமார் எழுதியதாக கிடைக்கப்பெற்ற கடிதங்களை கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கிய  காவல்துறையினர் அடுத்தடுத்து கிடைக்கும் ஆதாரங்களையும், விடை தெரியாத கேள்விகளையும் வைத்து கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் அவர் உயிரிழந்து 5 நாட்களை கடந்தும் தற்போது வரை வழக்கை சந்தேக மரணம் என்ற அடிப்படையிலேயே விசாரித்து வருகின்றனர்.

ஊர்மக்கள் முன்வைக்கும் கேள்விகள்:

ஊரின் தொடக்கத்தில் உள்ளது ஜெயக்குமாரின் வீடு. ஊருக்குள் செல்பவர்கள் அனைவரும் அந்த பகுதியை கடந்து தான் செல்ல வேண்டும். குறிப்பாக ஊரில் ஆடு, மாடு, இருசக்கர வாகனம், நகை போன்றவை திருட்டு போனாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் என்றாலோ முதலில் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்டு அந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவது ஜெயக்குமாரின் வீட்டு சிசிடிவி கேமராவை தான். பல்வேறு வழக்குகளுக்கு முக்கிய ஆதாரமாக இருந்த சிசிடிவி கேமராக்கள் இந்த சம்பவத்தில் 2 நாட்களாக வேலை செய்யவில்லை என்று சொல்வது மிகப்பெரிய கேள்விகளையும், சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது? இதில் மிகப்பெரிய முரண்பாடு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். உண்மையாகவே வேலை செய்யவில்லையா? என்பதை காவல்துறை தான் விசாரித்து வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்கின்றனர்.

பெண்ணுடன் தொடர்பா??

ஜெயக்குமாருக்கும், களக்காட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும், இதுகுறித்து ஜெயக்குமாரின் குடும்பத்தார் அவர்களை கண்டித்ததோடு மகன்களுக்கும் அவருக்குமிடையே இதற்கு முன் பிரச்சினை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் ஜெயக்குமார் அடிக்கடி அப்பெண்ணுடன் பேசி வந்ததாகவும் கூறப்படும் நிலையில் அதன் அடிப்படையில் அந்த பெண்ணிடமும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 2 நாட்களாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் ஜெயக்குமாரின் குடும்பத்தார் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ளனர். குறிப்பாக ஜெயக்குமாரின் மகன்களிடம் கடந்த 2 நாட்களில் பலமுறை விசாரணையானது நடைபெற்றது. மேலும் நேற்றைய தினம் தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட கேனை கொண்டு அவரது மகன் கருத்தையா ஜெப்ரினிடம் விசாரணை நடத்திய நிலையில் தற்போது தோட்டத்து கிணற்றில் இருந்து கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது விசாரணையில் முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது. முதலில் ஜெயக்குமார் எழுதியதாக சொல்லப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்ற நிலையில் தற்போது வீடு மற்றும் தோட்டத்தை சுற்றி கிடைக்கும் தடயங்களை கொண்டு குடும்பத்தினர் விசாரணை வளையத்திற்குள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ops slams Nainar Nagendran : ”இனியாவது உண்மையை பேசுங்க..” நயினார் நகேந்திரன் பேச்சுக்கு.. கொதித்து தள்ளிய ஓபிஎஸ்
Ops slams Nainar Nagendran : ”இனியாவது உண்மையை பேசுங்க..” நயினார் நகேந்திரன் பேச்சுக்கு.. கொதித்து தள்ளிய ஓபிஎஸ்
Coolie Audio Launch LIVE: நானும் எவ்ளோதான் நல்லவனாவே நடிக்கிறது...அஜித் வசனம் பேசிய ரஜினிகாந்த்
Coolie Audio Launch LIVE: நானும் எவ்ளோதான் நல்லவனாவே நடிக்கிறது...அஜித் வசனம் பேசிய ரஜினிகாந்த்
சிரிப்பால் மகிழவைத்த கலைஞர்....நடிகர் மதன் பாப் காலமானார்
சிரிப்பால் மகிழவைத்த கலைஞர்....நடிகர் மதன் பாப் காலமானார்
Prajwal Revanna: முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆப்பு... பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
Prajwal Revanna: முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆப்பு... பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment
DMK MLA Vs Thanga Tamilselvan | ’’ஏன்டா..டேய் ராஸ்கல் ‘’திமுக MLA vs தங்கதமிழ்ச்செல்வன் கடும் மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ops slams Nainar Nagendran : ”இனியாவது உண்மையை பேசுங்க..” நயினார் நகேந்திரன் பேச்சுக்கு.. கொதித்து தள்ளிய ஓபிஎஸ்
Ops slams Nainar Nagendran : ”இனியாவது உண்மையை பேசுங்க..” நயினார் நகேந்திரன் பேச்சுக்கு.. கொதித்து தள்ளிய ஓபிஎஸ்
Coolie Audio Launch LIVE: நானும் எவ்ளோதான் நல்லவனாவே நடிக்கிறது...அஜித் வசனம் பேசிய ரஜினிகாந்த்
Coolie Audio Launch LIVE: நானும் எவ்ளோதான் நல்லவனாவே நடிக்கிறது...அஜித் வசனம் பேசிய ரஜினிகாந்த்
சிரிப்பால் மகிழவைத்த கலைஞர்....நடிகர் மதன் பாப் காலமானார்
சிரிப்பால் மகிழவைத்த கலைஞர்....நடிகர் மதன் பாப் காலமானார்
Prajwal Revanna: முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆப்பு... பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
Prajwal Revanna: முன்னாள் பிரதமரின் பேரனுக்கு ஆப்பு... பாலியல் வன்கொடுமை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!
பாதுகாப்புதான் மொதல்ல; இனி இது கட்டாயம்- 28 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு
பாதுகாப்புதான் மொதல்ல; இனி இது கட்டாயம்- 28 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு
10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; இந்திய ரயில்வேயில் 3 ஆயிரம் பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; இந்திய ரயில்வேயில் 3 ஆயிரம் பணியிடங்கள்- விண்ணப்பிப்பது எப்படி?
TVK Vijay: விஜய்யுடன் கூட்டணி வைங்க.. தமிழக காங்கிரசிடம் அடம்பிடிக்கும் கேரள காங்கிரஸ் - இதான் விஷயமா?
TVK Vijay: விஜய்யுடன் கூட்டணி வைங்க.. தமிழக காங்கிரசிடம் அடம்பிடிக்கும் கேரள காங்கிரஸ் - இதான் விஷயமா?
மேடையிலே அடித்துக் கொண்ட திமுக MP - MLA... ஷாக்கில் உறைந்த கலெக்டர் - தேனியில் பஞ்சாயத்து!
மேடையிலே அடித்துக் கொண்ட திமுக MP - MLA... ஷாக்கில் உறைந்த கலெக்டர் - தேனியில் பஞ்சாயத்து!
Embed widget