மேலும் அறிய

ஆய்வகத்தில் செயல்பட்ட வகுப்பறை.. தவறி விழுந்த ஆசிட் பாட்டிலால் மாணவிக்கு கண் பாதிப்பு - நெல்லையில் சோகம்

வகுப்பறையில் இடமின்றி ஆய்வகத்தில் வைத்து வகுப்பு நடத்தியதால் மேல் இருந்த ஆசிட் பாட்டில் விழுந்து கண் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சத்திரம் குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி இருபாலர் படிக்கும் பள்ளியாக உள்ள நிலையில் மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆய்வகங்களும் வகுப்பறைகளாக செயல்படுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வகுப்பறையாக செயல்பட்ட ஆய்வகத்தை மாணவிகள் பூட்டிய போது அங்கிருந்த ஆசிட் பாட்டில் உடைந்து மாணவியின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த மாணவியை சக மாணவிகள் மீட்டு ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்து நெல்லையில் உள்ள தனியார் கண் மருத்துவ மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.  

இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது அவர் நலமாக இருக்கிறார்.  இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை பாலமுருகன் அளித்த புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் மாணவியின் பெற்றோர் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்கத்தினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் பள்ளியில் ஆய்வகத்தில் வைத்து வகுப்பு நடத்தப்பட்டதன் காரணமாகவே இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்தின் கவன குறைவும், மெத்தனமான போக்குமே இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவியின் பாதிப்பை உணர்ந்து கொள்ளாமல் பணம் கொடுத்து இந்த பிரச்சனையை சரி செய்து முடிக்க முயற்சி எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தார் தலையிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஆய்வகத்தில் செயல்பட்ட வகுப்பறை.. தவறி விழுந்த ஆசிட் பாட்டிலால் மாணவிக்கு கண் பாதிப்பு - நெல்லையில் சோகம்

பள்ளியில் இடப்பற்றாக்குறை காரணமாகவே ஆய்வகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டதனால் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனவே பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதுடன் 25 லட்சம் ரூபாய் நிவாரணமும் அரசு சார்பில் வழங்க வேண்டும். பள்ளிகளில் மாணவிகளுக்கு இது போன்ற பாதிப்புகளும், பிரச்சனைகளும் ஏற்படாத வண்ணம் கண்காணிப்பு குழுக்களை பள்ளிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்பதுடன் சிசிடிவி கேமராக்களையும் தேவையான இடங்களில் பொருத்தி பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.


ஆய்வகத்தில் செயல்பட்ட வகுப்பறை.. தவறி விழுந்த ஆசிட் பாட்டிலால் மாணவிக்கு கண் பாதிப்பு - நெல்லையில் சோகம்

இதுகுறித்து மாணவியின் தாய் கூறும்பொழுது, “மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளோம். பள்ளியிலிருந்து ரூ.10 ஆயிரம் கொடுத்து வைத்துக்கொள்ளுமாறு கொடுத்தனர், வேண்டாம் என்று நாங்கள் கொடுத்துவிட்டோம், ஆட்சியருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை, வகுப்பறையில் இடமின்றி ஆய்வகத்தில் வைத்து நடத்தியதால் மேல் இருந்த ஆசிட் பாட்டில் விழுந்து கண் பாதிக்கப்பட்டுள்ளது.  9 ஆம் வகுப்பு தான் படிக்கிறாள்.  எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Embed widget