மேலும் அறிய

திமுகவினர் தாக்கிய சம்பவம்; மாவட்ட எஸ்பியிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு

திமுக நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு

கன்னியாகுமரி மாவட்டம் இறைச்சகுளம் பகுதியில் சாலை அமைக்கும் பணி தரமற்று இருப்பதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை திமுக நிர்வாகிகள் தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திமுகவினர் தாக்கிய சம்பவம்; மாவட்ட எஸ்பியிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு
 
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சாலை சீரமைப்பு மற்றும் தார் ரோடு போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நாகர்கோவில் இறைச்சகுளம் பகுதியில் சாலை பணிகள் போடுவதற்கான ஒப்பந்தத்தை எடுத்தவர் குமரி கிழக்கு மாவட்ட திமுக கட்சியினுடைய பொருளாளர் கேட்சன் நேற்று இறைச்சகுளம் பகுதியில் தார் சாலை போடும் பணியில் நடைபெற்று வரும் போது அரசின் விதிமுறைககளை மீறி தரம் குறைந்த அளவில் சாலைகள் போடப்பட்டு வந்ததாக சம்பவ இடத்தில் பணியில் இருந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் சென்று நாம் தமிழர் கட்சியினர் கேள்வி கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் கேட்சன் மற்றும் திமுக நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியினர் தாக்கியது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் போலீசார் கண்முன்னையே திமுகவினர் நாம் தமிழர் கட்சியினை தாக்கியது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் நேற்றைய தினம் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் அவர்களை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் மக்களை திரட்டி பெரும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

திமுகவினர் தாக்கிய சம்பவம்; மாவட்ட எஸ்பியிடம் நாம் தமிழர் கட்சியினர் புகார் மனு
 
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் ரூபன் கூறுகையில், ஜனநாயக உரிமையை நிலைநாட்டும் வகையில் தரம் இல்லாமல் நடைபெற்ற சாலை பணிகளை தடுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் தான் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அவர்கள் அதற்குரிய பதிலை கூறியிருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. திடீரென சம்பவ இடத்திற்கு வந்த திமுக நிர்வாகிகள் ஏன் என்ன எனக் கூட கேட்காமல் சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது அனைத்தும் போலீசார் முன்னிலையில் நடைபெற்று உள்ளது. போலீசார் எங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் அளிக்கவில்லை. அதேவேளையில் எங்களை தாக்கி விட்டு நாங்கள் மருத்துவமனைக்கு சென்ற நேரத்தில் சம்பவ இடத்திலேயே திமுக நிர்வாகிகளிடமிருந்து புகாரை பெற்றுக் கொண்டு எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்து வருகிறார்கள். நாங்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பார்க்க வந்துள்ளோம். இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Embed widget