மேலும் அறிய

எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு

’’கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 25 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது’’

கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா தாக்குதலால் மக்கள் வேதனை அடைந்து உள்ளனர் ,கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 25 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது  மூன்று மடங்கு உயர்ந்து உள்ளது. குமரி மாவட்டத்தில் களப்பணியாளர் மூலமாகவும் சோதனைச்சாவடி மூலமாகவும் நேற்று 3256 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 91 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆண்கள் 48 பேரும் பெண்கள் 43 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 13 பேருக்கும், கிள்ளியூர் தாலுகாவில் 3 பேருக்கும், குருந்தன்கோடு தாலுகாவில் 10 பேருக்கும், மேல் புறத்தில் 5 பேருக்கும், முஞ்சிறையில் 9 பேருக்கும், ராஜாக்கமங்கலத்தில் 4 பேருக்கும், திருவட்டாரில் 11 பேருக்கும், தோவாளையில் ஒருவருக்கும், தக்கலையில் 12 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து வந்த ஒருவரும் தென்காசியில் இருந்து வந்த ஒருவருக்கும் பாதிப்பு உறுதியாகியுள்ளது.நாகர்கோவில் நகரில் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 10 முதல் 15 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் பறக்கை செட்டித்தெரு பகுதியில் அரசு பஸ் கண்டக்டர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த 30 பேரின் சளி மாதிரிகளை மாநகராட்சி சுகாதார ஊழியர்கள் சேகரித்தனர். அதற்கான முடிவுகள் இன்று வெளியானது. அந்த பகுதியில் தாய், மகன் உள்பட மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்து வந்த பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வசித்து வந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் ஆஸ்பத்திரிகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நகர்ப்புறங்களில் மட்டுமல்ல கிராமப்புறங்களிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் 2 டோஸ் தடுப்பூசியைப் செலுத்தி அரசின் வழிகாட்டு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அரவிந்த் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.


எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு


நாகர்கோவில் நகரின் பல்வேறு இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டம் முழுவதும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 10 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.இன்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன நிலையில் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Toyota Urban Cruiser BEV: தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
தரமான சம்பவம்.. ஒரே சார்ஜ்.. 550 கி.மீ ரேஞ்ச்; இந்தியாவில் முதல் EV காரை களமிறக்கும் டொயோட்டா
Embed widget