மேலும் அறிய

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!

”நெல்லை மணிமுத்தாறு பகுதி பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்த கரடியை பொதுமக்கள் விரட்டி அடித்த நிலையில் கரடி மரத்தின் மீது நிற்பதால் பொதுமக்கள் பீதி”

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, யானை, மான், மிளா காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. குறிப்பாக பாபநாசம், கடையம், சிவந்திபுரம், மணிமுத்தாறு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மலையடிவாரத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகளும் அவ்வப்போது உணவு தேடி ஊருக்கு நுழைவது வாடிக்கையாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன் பாபநாசம் அருகே அனவன்குடியிருப்பு, வேம்பையாபுரம் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 4 சிறுத்தைகள் தொடர்ச்சியாக கூண்டு வைத்து பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அடர் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. இருப்பினும் இன்னும் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர்ச்சியாக வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில்  ஈடுபட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க கரடிகளும் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. 

குறிப்பாக இன்று விடுமுறை நாள் என்பதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் நேரத்தில் இன்று பிற்பகலில் பட்டப்பகலில் மணிமுத்தாறின் பிரதான சாலையில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அதனை கண்ட மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதனை கண்டு ஓடிய கரடி மணிமுத்தாறில் உள்ள 9 ஆம் காவல் பட்டாலியன் தளவாய் விடுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். 


நெல்லை அருகே ஊருக்குள் புகுந்த கரடி..! மரத்தின் மீது தஞ்சமடைந்ததால் பொதுமக்கள் பீதி..!

இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். மேலும் மரத்தில் உள்ள கரடியை உடனடியாக பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்களும் அங்குள்ள காவலர்களும் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மரத்தில் இருக்கும் கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக வனத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. அதோடு மயக்கமடைந்து கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க வலையை விரித்து கரடியை பத்திரமாக மீட்கும் வகையில் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் சூழ்ந்து இருப்பதால் கீழே இறங்காமல் கரடியும் அச்சத்திலேயே 10 மணி   நேரத்திற்கும் மேலாக மரத்தில் தஞ்சமடைந்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குனர் இளையராஜா நேரில் பார்வையிட்டு கரடியை மீட்டு வனத்திற்குள் அனுப்பும் பணியை முடுக்கிவிட்டுள்ளார்.  தொடர்ந்து அதற்கான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget