மேலும் அறிய

மாணவர்களே செல்போன் பார்ப்பதை குறைத்து படிப்பில் கவனம் செலுத்துங்கள் - அமைச்சர் கயல்விழி அட்வைஸ்

திமுக ஆட்சியில்தான்  ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு அதிகமான விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது, பழைய கட்டிடங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி அவைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் துறை ரீதியான ஆய்வுப் பணிக்காக இன்று நெல்லை வந்தார். அப்போது நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் அரசு  ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி, 12- ம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விடுதி மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், மாணவர்கள் தங்கும் அறை ஆகியவற்றை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 100 சதவீத தேர்ச்சிக்கு காரணமாக இருந்த ஆசிரியர்களை அமைச்சர் பாராட்டி கவுரவித்தார்.

முன்னதாக அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் பேசுகையில், “நெல்லை மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக உள்ளது. இந்த கடம்பன்குளம் ஆதித்திராவிடர் நல பள்ளி 12- ம் வகுப்பில் 100 சதவீதமும், 10- ம் வகுப்பில் 89 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக 10- ம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த பள்ளியைச் சேர்ந்த  சந்தோஷ் முதலிடம் பிடித்துள்ளார் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது மிக முக்கியம். ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் கல்விதான் தீர்மானிக்கிறது. மாணவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை செல்போன் பார்ப்பதைக் குறைத்துக்கொண்டு படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்களை மதித்து நடப்பதுடன் அதிக மதிப்பெண்கள் எடுத்து அவர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும். தமிழக முதல்வர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து நிதியை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

திமுக ஆட்சியில்தான்  ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு அதிகமான விடுதிகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது, பழைய கட்டிடங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி அவைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. கல்வியோடு மாணவர்கள் ஒழுக்கத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நன்கு படித்து உயர்பதவிகளுக்கு செல்ல வாழ்த்துகிறேன்” எனக்கூறினார்.

இதனைத் தொடர்ந்து கங்கைகொண்டானில் உள்ள அரசு மாணவர் விடுதியையும் ஆய்வு செய்தார். அங்கு விடுதியில் மாணவர்களுக்கு சமைக்கப்பட்டிருந்த உணவிணை சாப்பிட்டு அதன் தரத்தையும் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான், சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப், பொறுப்பு மேயர் ராஜூ, மூலக்கரைப்பட்டி பேரூர் செயலாளர் முருகையாபாண்டியன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget