மேலும் அறிய

“அங்குள்ள வேலையை தவிர அவர்களுக்கு எதுவும் தெரியாது”; வெளியேற்றாதீர்கள - மாஞ்சோலை மக்கள் குறித்து திமுக ஆவுடையப்பன்

தொழிலாளர்களை வெளியேற்றாமல் தமிழக அரசே மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்திட வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம்.

 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு ஆகிய பகுதிகளில் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர். சிங்கம்பட்டி ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்த இந்த இடம்1929 ஆம் ஆண்டு தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்துக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. இதனால் காலங்கள் கடந்து பல அரசு நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடர்ந்த வனப் பகுதியான மாஞ்சோலையை  வனத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இருந்தது. இது போன்ற நிலையில் தான் சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்கிய குத்தகை காலம் வரும்  2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.

எனவே நெல்லை வனத்துறை அதிகாரிகள் மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது முதலே மாஞ்சோலை  தொழிலாளர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பல தலைமுறையாக வசித்து வரும் மக்கள் கவலையில் மூழ்கியுள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கிடையில் மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசே தேயிலைத் தோட்டத்தை ஏற்று நடத்தி வேண்டுமென பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது போன்ற நிலையில் முன்னாள் தமிழ்நாடு சபாநாயகரும், நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ஆவுடையப்பன் நெல்லை ஆட்சியர் கார்த்திகேயனை சந்தித்து மனு அளித்தார், 

தொடர்ந்து இதுகுறித்து ஆவுடையப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தை போன்று நெல்லையிலும் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலையில் 100 ஆண்டு காலமாக ஐந்து தலைமுறையாக தொழிலாளர்கள் வசிக்கின்றனர். அவர்களை அங்கே இருந்து வெளியேற்றினால் எங்கே போவோம் என்று பயப்படுகின்றனர். வீடுகள், கல்விக்கூடங்கள், ரேஷன் கடைகள், தபால் நிலையங்கள், அரசின் 5 வார்டுகள் கூட அங்கு உள்ளது. அவர்களை அங்கிருந்து வெளியேற்றினால் அந்த வார்டுகளையே கலைக்க வேண்டிய நிலை வரும். அது போன்ற சூழல் ஏற்படக்கூடாது. அங்குள்ளவர்களின் வேலை வாய்ப்பு என்பது அங்கே தான் கிடைக்க வேண்டும். அவர்களுக்கு கீழே சொந்தமாக இடம் எதுவும் கிடையாது, வேறு வேலையும் பார்க்க தெரியாது எனவே தொழிலாளர்களை வெளியேற்றாமல் தமிழக அரசே மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்திட வேண்டும் என ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். முதல்வருக்கு பரிந்துரை செய்து அதன்படி முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்” என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" இளைஞருடன் திருமணத்தை மீறிய உறவு " சாலையில் கணவன் செய்த வெறிச் செயல்
தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
தமிழகத்திலிருந்து கேரளா வழியாக மங்களூருக்கு புதிய ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி: கொலைகள் அதிகரிப்பு! பெண்கள் மீதான வன்முறை உச்சம்! அதிர்ச்சியில் மக்கள்!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
ABP Premium

வீடியோ

Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?
Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GOLD AND SILVER RATE TODAY : வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் முதல் நாளே குஷி.!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
TN Election: 2021 Vs 2026 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன வித்தியாசம் - வாக்காளர் தொடங்கி வாக்குப்பெட்டி வரை
TN Election: 2021 Vs 2026 - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் என்ன வித்தியாசம் - வாக்காளர் தொடங்கி வாக்குப்பெட்டி வரை
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
TN Election 2026: வாக்களர் பட்டியலில் பெயர் இல்லையா? மார்ச் 27 வரை விண்ணப்பித்து வாக்களிக்கலாம் - எப்படி?
Top 10 News Headlines: சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
சிபிஐ-யிடம் விஜய் கோரிக்கை, ட்ரம்ப்புக்கு நோ சொன்ன நாடுகள், நெதன்யாகு புதிய வீடியோ போலியா.? - 11 மணி செய்திகள்
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: அவசரமாக தரையிறங்கிய விமானம், சரிந்த தங்கம் விலை, தவெக கூட்டணி -தமிழகத்தில் இதுவரை
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
Chennai Encounter: தேர்தல் பரபரப்பு, சென்னையில் என்கவுன்டர் - சுட்டுக் கொல்லப்பட்ட தொப்பை கணேசன், என்ன ஆச்சு?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் - டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு? எடப்பாடி சொல்வது என்ன?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
TVK Vijay: ஒவ்வொரு ஏரியாவுக்கும் வரும் விஜய்.. பக்கா பிளான்.. அடுத்து இந்த ஊர் தானா?
Embed widget