மேலும் அறிய

மாஞ்சோலைக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து மீண்டும் துண்டிப்பு

மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட்டு சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து சீரான பேருந்து போக்குவரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி,தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு அதன்படி கடந்த டிச 17,18 ஆகிய தேதிகளில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் வீடுகள், சாலைகள் என பெரும்பாலான பகுதிகள் சேதமானது, குறிப்பாக மலைப்பகுதியான மாஞ்சோலை பகுதியில் அதிக மழைப்பொழிவு இருந்தது. மேலும் மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் மலை பாதை கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏற்கனவே மோசமான நிலையில் இருக்கும் மாஞ்சோலை செல்லும் மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் முதல் பள்ளி கல்லூரி செல்லும் குழந்தைகள் முதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கடுமையான மழையால் மேலும் மிகக்கடுமையாக சேதமடைந்ததால் அப்போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.  இதனால் கடந்த டிசம்பர் 17 -ந் தேதி முதல் மாஞ்சோலை பகுதிக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. 


மாஞ்சோலைக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து மீண்டும் துண்டிப்பு

இதனால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடும் அவதியடைந்தனர். அதோடு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியரும் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சென்று வந்தனர். குறிப்பாக அந்த வாகனத்தில் 150 முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்வதால் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பதாக அங்குள்ள மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். எனவே சாலையை சீரமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து புகார் சென்றதை தொடர்ந்து நேரில் பார்வையிட்ட சேரன்மகாதேவி சார் ஆட்சியர் விரைவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை வனத்துறை வாகனத்தில் 25 முதல் 35 ரூபாய் வரை வாங்கப்படும் என கூறிச் சென்றார்.  அதன் பின் வனத்துறை வாகனமும் பழுதடைந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர்  மாவட்ட நிர்வாகம் சார்பாக சாலையை தற்காலிகமாக சீரமைத்தனர், 


மாஞ்சோலைக்கு செல்லும் பேருந்து போக்குவரத்து மீண்டும் துண்டிப்பு

அதைத் தொடர்ந்து நேற்று முதல் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையை அம்பாசமுத்திரம் தாசில்தார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும்  பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும், போக்குவரத்து சீராக சென்று வந்தால் வழக்கம் போல் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்...  இந்த நிலையில் மணல்களை போட்டு சரி செய்யப்பட்ட சாலையில் பேருந்து செல்லும் போது பேருந்தின் சக்கரம் சிக்கிக்கொண்டது. இதனால் மீண்டும் இன்று அப்பகுதிக்கு பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் எப்போது பேருந்து இயங்கும் என்ற எதிர்பார்ப்பில் அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர். அதோடு நிறுத்தப்பட்ட பேருந்து சேவையால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகம், வனத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் தலையிட்டு சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து சீரான பேருந்து போக்குவரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
Embed widget