மேலும் அறிய

”மின்விளக்கிற்கு 2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி”: நெல்லையில் சமூக ஆர்வலர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு..

ஒவ்வொரு துறையும் மாறி மாறி தங்களை சுற்ற விடுவதாகவும், இதனால் கடந்த இரண்டு வருடங்களாக மின்விளக்கு எரியாமல் இருப்பதால் நினைவஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்

திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் எதிரே அமைந்துள்ள பகுதி திருநெல்வேலி மாநகராட்சியின் 36-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியாகும். இங்குள்ள மின் விளக்கு கடந்த இரண்டு வருடங்களாக எரியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும்  நெல்லை   மாநகரத்தின் முக்கிய பகுதியாக விளங்கும் நிலையில் அங்கு மின் எரியாமல் இருப்பதால் அப்பகுதியை கடந்து செல்லும் மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமத்தை அனுபவிப்பதாக கூறுகின்றனர்.

மேலும் மின் விளக்கு எரியாமல் இருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு துறையினரிடமும் மனு கொடுத்தும் நேரில் சென்று தெரிவித்தும் மின்விளக்கு எரியவில்லை என கூறி சமூக ஆர்வலர் சிராஜ் என்பவர் குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் அந்த மின் விளக்குக்கு நாளை காலை நினைவு அஞ்சலி செலுத்தப்போவதாக கூறி மின்விளக்கின் அருகே  போஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ளார். 

அதில் மின்விளக்கிற்கு இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி என தோற்றம் மறைவு என தேதி மாதம் வருடத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் சென்ற வருடம் இதே  நாளில் தன் இன்னுயிரை துறந்து, இன்று வரை ஒளிராமல் வெறும் கூடாக நின்று கொண்டிருக்கும் உம்மை அடுத்த மின்விளக்கு மாற்றப்படும் வரை நினைவு கூறுவோம் என்றும் நீங்கா நினைவுகளுடன் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உன்  நண்பர்கள் (மின்விளக்குகள்) என்று எழுதியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து சிராஜ் கூறும்போது, பொதுமக்கள் அதிக அளவில் வந்து போகும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்த மின்விளக்கு கடந்த இரண்டு வருடங்களாக எரியவில்லை என்றும் இது குறித்து மாநகராட்சியில் புகார் அளித்தால், இது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கீழ் வரும் என்றும் மருத்துவமனை மருத்துவ கல்லூரியிடம் சென்று தெரிவித்தால் இதனை மின்வாரியம் தான் பராமரிக்கிறது என்றும் ஒவ்வொரு துறையும் மாறி மாறி தங்களை சுற்ற விடுவதாகவும் இதனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மின்விளக்கு எரியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த அவலத்தை நினைவு கூறும் வகையில் இந்த மின் விளக்கு எரியாமல்போன ஜூலை மாதம் 15-ஆம் தேதி 2022-ம் வருடத்திலிருந்து இரண்டு வருடங்கள் நிறைவு பெறுவதை ஒட்டி அந்த மின் விளக்கிற்கு நினைவு அஞ்சலி போஸ்டர் அடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த போஸ்டரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN Govt., Marriage Advance: அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
Trump Vs Musk: “ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
“ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt., Marriage Advance: அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி; இனி ரூ.5 லட்சம் கிடைக்கறது உறுதி - அரசாணையே போட்டாச்சு
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
தேங்காய், பழத்தால் சண்டை! உடைந்தது திமுக எம்பி மகனின் மண்டை - மதுரையில் நடந்தது என்ன?
Trump Vs Musk: “ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
“ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
Embed widget