மேலும் அறிய

தென்காசி அருகே அச்சுறுத்தி வரும் சிறுத்தை..! 2 இடங்களில் கூண்டு வைத்து வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு..!

”வன  விலங்குகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தல்”

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ளது வடகரை பகுதி. இங்கு பாறைகளில் கடந்த சில  வாரங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று நின்றுள்ளது. இதனை  அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வீடியோ எடுத்த நிலையில் அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  செங்கோட்டை அருகே உள்ள வடகரை, மேக்கரை பகுதிகளில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரியும் நிலையில், சிறுத்தையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்த பகுதியில் மக்கள் பாதுகாப்பாக நடமாட வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

இந்த  நிலையில் கடந்த மாதம் 7 ஆம் தேதி மேக்கரை அருகே உள்ள வடகரை ரஹ்மானியாபுரம் குடியிருப்பு பகுதியில்  காஜா மைதீன், அப்துல்காதர் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு தொழுவத்திற்குள் புகுந்து  இரண்டு பசுமாட்டை சிறுத்தை கடித்த நிலையில், ஒரு பசு மாடு உயிரிழந்தது, மற்றொரு பசு மாடு பலத்த  காயமடைந்தது. அதன்பின்னர் அம்மாத இறுதியில் வடகரை  அடவி நயினார் அணைக்கு அருகே டேம்ரோடு பகுதியை சேர்ந்த ஹனிபா என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியையும் அடித்துக் கொன்றது.

இதனால் அப்பகுதி சுற்றுவட்டார மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர்.  மேலும் உடனடியாக சிறுத்தையை பிடித்து அடர் வனப்பகுதியில் விடவேண்டும் எனவும் வனத்துறையினருக்கு கோரிக்கையும் விடுத்தனர்.  இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காலவர், வேட்டைத்தடுப்புக்காவலர் அடங்கிய தனிக்குழுவினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். குறிப்பாக சிறுத்தை ஊருக்குள் புகாத வண்ணம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வனக் குழுவினர் அந்த பகுதியில் முகாம் மிட்டுள்ளதாகவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வடகரை, மேக்கரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த  இடங்களில் சிறுத்தை கால் நடைகளை தாக்கி வரும் நிலையில் மனித உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு கருதி தற்போது மாவட்ட வன அலுவலர் தலைமையில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கும் நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது. அதன்படி  அடவி நயினார் அணை அருகே ஒரு கூண்டும்,  அன்பு இல்லம் செல்லும் பாதையில் ஒரு கூண்டும் என இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டு அதில் ஆடுகளை கட்டி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என்பது குறித்தும் தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அதோடு வன  விலங்குகள் நடமாடும் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். 

ALSO READ | The Goat Twitter Review : தெறிக்கவிட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாரா விஜய்...தி கோட் பட ட்விட்டர் விமர்சனம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தங்கை ஆணவக்கொலை?அண்ணன் செய்த கொடூரம் நாடகம் ஆடிய குடும்பம்BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
IPL 2025 RCB vs GT: சொந்த மண்ணில் சோடை போன ஆர்சிபி! ஈஸியா ஜெயிச்ச குஜராத்!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
நித்தியானந்தா உயிரோடு இருக்கிறாரா? நாளை உடையும் உண்மை! வெளியான முக்கிய அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
வீட்டைவிட்டு வெளியே வராதீங்க! இரவு 8 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு!
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
கூப்பிட்றப்ப எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணனும்.. இன்ஸ்டா பிரபலத்துக்கு நிகழ்ந்த கொடுமையை பாருங்க
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Embed widget