மேலும் அறிய

கூகுள் பே பணம் வருவதில் தாமதம்.. சண்டையில் முடிந்த சம்பவம்..குற்றாலத்தில் பரபரப்பு!

பணம் அனுப்பியதாக உணவு அருந்தியவர்கள் கூறியும் எனக்கு எதுவும் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்று உரிமையாளர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள், கடை உரிமையாளரிடையே கைகலப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் மிகவும் பிரசித்திப்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். இங்குள்ள அருவிகளில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது உண்டு. குறிப்பாக விடுமுறை தினங்களில் கூட்டம் அலைமோதும்.  குறிப்பாக சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில்  நேற்று கும்பாபிஷேசம் என்பதால் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் குற்றாலம் செல்லும் வழிகளில் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த சூழலில் குற்றாலம் அருவிக்கு செல்லும் நுழைவுவாயில் அருகே  உள்ள ஒரு கடையில் நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உணவு அருந்திவிட்டு அதற்கான  தொகையை ஆன்லைன் மூலம் அனுப்பியதாக தெரிகிறது.

கூகுள் பே மூலம் பணம் அனுப்பிய நிலையில் அதற்கான பணம் சென்று சேர்ந்ததற்கான மெசேஜ் மற்றும் ஒலிபெருக்கி வாயிலான எந்த தகவலும் கடை உரிமையாளருக்கு வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் பணம் அனுப்பியதாக உணவு அருந்தியவர்கள் கூறியும் அதனை ஏற்க மறுத்த உரிமையாளர் எனக்கு எதுவும் வரவில்லை, பொய் சொல்கிறீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கடை உரிமையாளரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் கடையில் இருந்த பொருட்களை சுற்றுலா பயணிகள் சேதப்படுத்தியதாக தெரிகிறது. தொடர்ந்து அருகே இருந்த ஆட்டோ  ஓட்டுநர்கள், பொதுமக்கள் இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அதற்குள் இரு தரப்பும் சாலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கட்டிப்புரண்டு சண்டியிட்டுக் கொண்டனர். தகவலறிந்த குற்றாலம் போலீசார் உடனடியாக சம்பவ  இடத்திற்கு விரைந்து வந்து மோதலை தடுக்க முயற்சி மேற்கொண்டனர்.

தொடர்ந்து இரு தரப்பினரையும் விசாரணை நடத்தினார். ஆன்லைன் மூலம் பணம் அனுப்பவதில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக இது போன்று சில நேரங்களில் தாமதமாக பணம் வந்து சேர்ந்ததற்கான மெசேஜ் வரும் நிலையில் சிறு பிரச்சினைக்காக இரு தரப்பினரும் சாலையில் சண்டையிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற  சம்பவங்கள் குற்றாலம் பகுதிகளில் தொடர் கதையாகி வரும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கவும், கூடுதல் போலீசாரை பணியில் அமர்த்தவும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Accident : காலையிலேயே விபத்து: உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் உயிரிழப்பு... கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்...
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
Breaking News LIVE, Sep 25: குஜராத்: கனரக வாகனம் மீது கார் மோதி விபத்து - பயணிகளுக்கு என்னாச்சு?
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
RBI Rules: வங்கி ஊழியர்கள் உதவவில்லையா? வேண்டுமென்றே அலைகழிக்கின்றனரா? அப்ப இதை செய்யுங்க..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
MK Stalin Letter : ”சகோதரர் திருமாவளவன்” கடிதம் வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
விமானத்தில் திடீரென வந்த புகை.. எரிபொருள் நிரப்புவதில் குளறுபடி ? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Sri Lanka Parliament: அதுக்குள்ளவா..! இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்த புதிய அதிபர் - கையோடு தேர்தல் தேதி அறிவிப்பு
Tvk Vijay maanadu: முதல் மாநாடிற்கு சுவர் விளம்பரத்தில்  தெறிக்கவிடும் திருவண்ணாமலை  தவெகவினர்.!
Tvk Vijay maanadu: முதல் மாநாடிற்கு சுவர் விளம்பரத்தில் தெறிக்கவிடும் திருவண்ணாமலை தவெகவினர்.!
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
TN Rain : மரக்காணத்தில் மனைவி, மகன் கண் முன்னே இடி தாக்கி ஒருவர் பலி...
Embed widget