மேலும் அறிய
கன்னியாகுமரி: தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து மீனவர் பலி
தொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர் துறைமுக நுழைவாயிலில் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து ஒருவர் பலி. இருவர் மருத்துவமனையில் அனுமதி.

தேங்காய்பட்டிணம் மீனவர்கள் துறைமுகம்
தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்து சைமன் என்ற மீனவர் உயிழிந்தார். தொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர் துறைமுக நுழைவாயிலில் அலையில் சிக்கி படகு கவிழ்ந்து பலியானர். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளிலும் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த துறைமுகத்தில் முகத்துவாரப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் நடந்து வருகின்றன. எனவே, துறைமுகத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தற்போது குமரி மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் இருந்தனர். பின்னர் நேற்று நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில் இன்று காலை சைமன் என்பவர் மீன்பிடிக்க சென்ற படகு துறைமுக நுழைவு வாயிலில் வந்தபோது எழுந்த ராட்சத அலையில் சிக்கி கவிந்து விபத்து ஏற்பட்டது. மேலும் அதில் இருந்த மீனவர்கள் அனைவரும் கடலில் தூக்கி விசபட்டனர். இதில் பூத்துறை பகுதியை சேர்ந்த சைமன் 52 என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவருடன் சென்ற மீனவர்களின் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு கடலில் தத்தளித்த அவர்களை சக மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஏற்கனவே இந்த துறைமுக கட்டுமானம் போதிய நிபுணத்துவம் இல்லாமல் கட்டப்பட்டு உள்ளதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த துறைமுக வாயிலை மறு சீரமைப்பு செய்ய பல முறை ஆய்வு செய்யபட்டு உள்ளது. இதுவரை சுமார் 15 கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ஏற்படும் விபத்தை தடுக்க துறைமுக வாயிலை ஆழப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
இந்தியா
திருச்சி
Advertisement
Advertisement