மேலும் அறிய

கன்னியாகுமரியில் அதிகரிக்கும் கொரோனா- 2ஆம் தவணை தடுப்பூசி போட ஆட்சியர் வேண்டுகோள்

குமரி மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர் - கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் அனைவரும் தடுப்பூசி போட ஆட்சியர் வேண்டுகோள்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு மாதங்களாக கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை யடுத்து கொரோனாவை கட்டுபடுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்திலும் கொரோனா சோதனை தினமும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக தினசரி பூஜ்ஜியத்தில் இருந்து வருகிறது. இருப்பினும் சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். 
 

கன்னியாகுமரியில் அதிகரிக்கும்  கொரோனா- 2ஆம் தவணை தடுப்பூசி போட ஆட்சியர் வேண்டுகோள்
 
தினமும் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை நடத்தப்படுகிறது. நேற்று ஒரே நாளில் கன்னியாகுமரி அரசு மருத்துக்கல்லூரி இல் 900 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் பாதிப்பு யாருக்கும் இல்லை. மேலும் தனியார் மையங்களிலும் 200க்கும் மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டதில் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.கடந்த சில வாரங்களாக அரசு அலுவலகங்கள் பொது மக்கள் கூடும் இடங்களில் பொது மக்கள் முக கவசம் இன்றி சுற்றி திரிகிறார்கள். தற்பொழுது பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து முககவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரியில் அதிகரிக்கும்  கொரோனா- 2ஆம் தவணை தடுப்பூசி போட ஆட்சியர் வேண்டுகோள்
 
பொது மக்கள் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அலுவலர்கள் பணிக்கு வரும்போது முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். குமரி மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் உடனடியாக அந்தந்த பகுதியில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனை களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டு மென்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget