மேலும் அறிய

நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

மாவட்டத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள ஏரி குளங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் சிறப்பு அதிகாரி அபூர்வா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட  அபூர்வா ஐ.ஏ.எஸ்,   ஐ.பி.எஸ் அதிகாரி அபின் தினேஷ் மொடாக் ஆகியோர்  தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது, 
இந்த கூட்டத்தில், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரை கண்ணன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உட்பட வருவாய் துறை, சுகாதார துறை, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 


நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

 


இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பாதிப்பு ஏற்பட்டால் செய்யக்கூடிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளான  டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.


நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா ஐ.ஏ.எஸ் கூறும்  பொழுது,  வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். நெல்லை மாவட்டத்தில் உள்ள சூழல் குறித்து தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம், நெல்லை மாவட்டத்தில் உள்ள 6  அணைகள் மூலம் வட கிழக்கு பருவமழையால் எந்த பாதிப்பும் தற்போது வரை இல்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,  நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் 50 சதவீததிற்கும் மேல் 50% நீர் இருப்பு உள்ளது. 10% குளங்களில் 90% க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிதலமடைந்த சாலைகளை மழையினால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக செப்பனிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

முன்னதாக வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கபட்ட ஐபிஎஸ் சிறப்பு அதிகாரி, நெல்லை மாநகர பகுதிகளில் ஏற்கனவே அதிக கனமழையின் போது வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடையார்பட்டி, தாமிரபரணி ஆற்றுப் பாலம், கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப் படுகைகளை ஆய்வு செய்தார், இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, விகேபுரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளபாதிப்பில் பொதுமக்கள் சிக்கியிருந்தால் அவர்கள் அங்கிருந்து மீட்க தேவையான நடவடிக்கைகள், பாதிப்பிற்கு முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் அப்புறப்படுத்தவதற்கான வழிகள், மீட்பு பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்வதற்கான பாதைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர காவல்துறையின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டல துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
TN WEATHER: அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
அடுத்த 7 நாட்கள் எங்கெல்லாம் மழை.! 55 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று... மீனவர்களே உஷார்- வானிலை மையம் அலர்ட்
Embed widget