மேலும் அறிய

நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

மாவட்டத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள ஏரி குளங்களை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என நெல்லை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் சிறப்பு அதிகாரி அபூர்வா ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட  அபூர்வா ஐ.ஏ.எஸ்,   ஐ.பி.எஸ் அதிகாரி அபின் தினேஷ் மொடாக் ஆகியோர்  தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது, 
இந்த கூட்டத்தில், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரை கண்ணன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார் அபினபு, நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உட்பட வருவாய் துறை, சுகாதார துறை, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். 


நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

 


இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பாதிப்பு ஏற்பட்டால் செய்யக்கூடிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளான  டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க சுகாதார துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று கொசுப்புழு தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.


நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நெல்லை மாவட்ட பேரிடர் கண்காணிப்பு சிறப்பு அதிகாரி அபூர்வா ஐ.ஏ.எஸ் கூறும்  பொழுது,  வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டோம். நெல்லை மாவட்டத்தில் உள்ள சூழல் குறித்து தீவிர கண்காணிப்பு செய்து வருகிறோம், நெல்லை மாவட்டத்தில் உள்ள 6  அணைகள் மூலம் வட கிழக்கு பருவமழையால் எந்த பாதிப்பும் தற்போது வரை இல்லை. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது,  நெல்லை மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களில் 50 சதவீததிற்கும் மேல் 50% நீர் இருப்பு உள்ளது. 10% குளங்களில் 90% க்கு மேல் நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெல்லை மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது என தெரிவித்தார். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிதலமடைந்த சாலைகளை மழையினால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தற்காலிகமாக செப்பனிட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.


நெல்லை மாவட்டத்தில் நிரம்பிய பிரதான அணைகள்: அதிகாரிகள் அவசர ஆய்வு!

முன்னதாக வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கண்காணிப்பு பணிகளுக்காக நியமிக்கபட்ட ஐபிஎஸ் சிறப்பு அதிகாரி, நெல்லை மாநகர பகுதிகளில் ஏற்கனவே அதிக கனமழையின் போது வெள்ள பாதிப்பு ஏற்பட்ட உடையார்பட்டி, தாமிரபரணி ஆற்றுப் பாலம், கருப்பந்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலம் மற்றும் தாமிரபரணி ஆற்றுப் படுகைகளை ஆய்வு செய்தார், இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம், சேரன்மகாதேவி, விகேபுரம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அதிகனமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க செய்யக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளபாதிப்பில் பொதுமக்கள் சிக்கியிருந்தால் அவர்கள் அங்கிருந்து மீட்க தேவையான நடவடிக்கைகள், பாதிப்பிற்கு முன் எச்சரிக்கையாக பொதுமக்கள் அப்புறப்படுத்தவதற்கான வழிகள், மீட்பு பணிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்வதற்கான பாதைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நெல்லை மாநகர காவல்துறையின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டல துணை ஆணையாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
திருநெல்வேலியில் அதிரடி: கஞ்சா விற்பனை, கொலை முயற்சி குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் 7 பேர் கைது!
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
Train schedule change: பயணிகளே அலர்ட்! தாம்பரத்துடன் நிறுத்தப்படும் தென் மாவட்ட ரயில்கள்! முழு தகவல்
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
திருநெல்வேலி: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1.65 லட்சம் பேர் நீக்கம், உங்கள் பெயர் உள்ளதா? உடனே சரிபார்க்கவும்!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாளை மின் தடை: திருநெல்வேலி & வள்ளியூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Smallpox Prevention : சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
சின்னம்மை பாதிப்பா குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீங்க... பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன.?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
TN Assembly: போஸ்டர், பேனர்களுக்கு நோ.. அரசியல் கட்சிகளையே அலறவிடும் தமிழக கிராமம் - எந்த ஊருப்பா?
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Khameni: 15 நிமிஷம்தான்.. முடிவுக்கு வந்த சண்டை! காஷ்மீரில் அப்பவே சம்பவம் செய்த காமேனி!
Israel Iron Beam: இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
இஸ்ரேல் களமிறக்கிய அதிநவீன ஆயுதம்; சிதறும் எதிரிகளின் ஏவுகணைகள்; அதென்ன அயர்ன் பீம்.?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
கிளாப் அடிக்குறதுனா சும்மாவா? விக்ரமனையே மிரளவைத்த காமெடி நடிகர் - இவரா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
KS Ravikumar: விக்ரமனிடம் கே.எஸ்.ரவிக்குமார் போட்ட கண்டிஷன்- என்ன தெரியுமா?
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்...சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரம்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Saudi Arabia Attack: ”உலகின் எண்ணெய் வங்கி” அராம்கோவை தாக்கிய ஈரான் ட்ரோன்கள் - கலக்கத்தில் உலக நாடுகள்
Embed widget