மேலும் அறிய

இயற்கை விவசாய பொருட்களை சந்தைப்படுத்த தனி சந்தை -ஆளுநர் ஆர் என் ரவி உறுதி

இயற்கை வேளாண்மை மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் ஆர் என் ரவி தென்காசி மாவட்டத்திற்கு சென்றார். குற்றாலத்தில் தனியார் மண்டபத்தில் விவசாயிகளுடன் உரையாடினார். பின்னர் சாலை மார்க்கமாக ஆழ்வார்குறிச்சிக்கு வருகை தந்தார். அங்கு பாரம்பரியமாக பானைகள் செய்யும் மண்பாண்ட தொழிலாளர்களிடம் உரையாடினார். அங்கு அவர்கள் தொழில் செய்யும் விதம் அவர்களின் வாழ்க்கைத்தரம் பாரம்பரிய தொழில் ஆர்வம் ஆகியவற்றை கேட்டறிந்தார். அவர்கள் அனைவரிடமும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் சந்தைப்படுத்துவதையும் கேட்டறிந்தார்.


இயற்கை விவசாய பொருட்களை சந்தைப்படுத்த தனி சந்தை -ஆளுநர் ஆர் என் ரவி உறுதி

அதன் பின்னர் சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரமம்-காந்தி கிராம் அறக்கட்டளையில் மாற்று திறன்களைக் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் ஆசிரியர்களுடன் ஆளுநர் ரவி விரிவான உரையாடல்களை நடத்தினார். சமூக நலனுக்கான நிறுவனத்தின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டினார்.


இயற்கை விவசாய பொருட்களை சந்தைப்படுத்த தனி சந்தை -ஆளுநர் ஆர் என் ரவி உறுதி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள டைகர் ரிசார்ட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு விவசாயிகளிடம் உரையாடினார். தமிழில் உரையை தொடங்கிய கவர்னர், ”இந்த நாள் எனக்கு சந்தோஷமான நாள். இந்த இடம் எனக்கு சந்தோஷம் தரக்கூடிய இடம். வடக்கே காசி இருப்பது போல் தெற்கே தென்காசி உள்ளது. பல்வேறு சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கிய மண். 11-ம் நூற்றாண்டில் மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்தவர் நமது பாரம்பரியத்தை அழித்த போது, அதே போன்று கட்டிடங்களை பராம்பரியத்துடன் தெற்கே உருவாக்கியவர் பராக்கிரம பாண்டியமன்னன்.


இயற்கை விவசாய பொருட்களை சந்தைப்படுத்த தனி சந்தை -ஆளுநர் ஆர் என் ரவி உறுதி

நான் ஒரு விவசாய குடும்பம் தான். 11-ம் மற்றும் 12ம் வகுப்பில் படிக்கும் காலத்தில் இருந்து விவசாய பணியில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுவருகிறேன். அதனால் எனக்கு விவசாயிகளை பார்க்கும் போது தனி மரியாதை மற்றும் பிடித்தம் தோன்றும். தன்னை உங்களுக்கு ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவும், கவர்னராகவும் தான் தெரியும். விவசாய பணி என்பது கடினமானது. விவசாயிகளின் வாழ்க்கை என்பது அதிகமான மேடு பள்ளங்களை கொண்டது. இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயின்ற பலர் இயற்கை விவசாயம் செய்து வருவது பாராட்டத்தக்கது. இயற்கை விவசாயத்தின் மூலம் வேதிபொருட்கள் இல்லாத உடலுக்கு நன்மை பயக்ககூடிய உணவுப்பொருட்களை தாம் உற்பத்தி செய்யலாம். காலநிலை மாறுபாட்டின் காரணமாக பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்படுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில வருடங்களில் பல நாடுகள் அழியும் நிலைக்கு தள்ளப்படும். நமது நாடு காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் உலக்கத்திற்கே உதாரணமாக உள்ளது. உலகத்திற்கே எடுத்துகாட்டாக உள்ள நமது பாரதத்தின் உந்து சக்தி விவசாயிகளாகிய நீங்கள் தான்.


இயற்கை விவசாய பொருட்களை சந்தைப்படுத்த தனி சந்தை -ஆளுநர் ஆர் என் ரவி உறுதி

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய லைஃப் என்ற திட்டம் ஐநா சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதில் நாம் வாழ்க்கையை எவ்வாறு நகர்த்துகிறோம்? இயற்கை சக்தியை எவ்வாறு உற்பத்தி செய்கிறோம், பயன்படுத்துகிறோம் என்பதையெல்லாம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்த ஜி 20 மாநாட்டில் இந்த திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை நம்முடைய பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார். அந்த திட்டத்தினை உலக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு வரவேற்றுள்ளார்கள் என்பது இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். ஆயிரக்கணக்கான வருடங்கள் நாம் விவசாயம் செய்து வருகிறோம். நமது நாட்டின் சொத்து விவசாயிகள் தான்.


இயற்கை விவசாய பொருட்களை சந்தைப்படுத்த தனி சந்தை -ஆளுநர் ஆர் என் ரவி உறுதி

இயற்கை விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்தால் நல்ல லாபத்தை பெற முடியும். இயற்கை வேளாண்மை மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். ஆகவே, சந்தைபடுத்துதல் முறையை நாம் தெளிவாக கற்று அதன்மூலம் விளைபொருட்களை விற்பனை செய்தால் கனிசமான லாபத்தை பெறமுடியும். வரும் காலங்களில் இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்த தனியாக சந்தை உருவாக்கப்படும். அந்த காலகட்டத்தில் இயற்கை விவசாயம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்றார்.


இயற்கை விவசாய பொருட்களை சந்தைப்படுத்த தனி சந்தை -ஆளுநர் ஆர் என் ரவி உறுதி

ஆழ்வார்குறிச்சியில் ஆளுநர் ரவி அவர்கள் சிவசைலபதி கோயிலில் சிவபெருமானை தரிசித்து அனைவருக்கும் அமைதி, வளம் மற்றும் நல்வாழ்வு கிடைக்க வேண்டிக் கொண்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
Elon Musk Net Worth: சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
சொத்தில் சாதனை படைத்த எலான் மஸ்க்; 700 பில்லியன் டாலரை தாண்டிய முதல் நபர் - உலகத்துலயேங்க.!
Epstein Files: வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
வெளியான எப்ஸ்டீன் கோப்புகள்; மாயமான ட்ரம்ப் தொடர்பான பதிவுகள்; எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்வி
Tata Punch vs Hyundai Exter: டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
டாடா பஞ்ச் சிஎன்ஜி-யா.? ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி-யா.? குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் சிறந்தது.?
Life Insurance Tips: மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
மக்களே கவனம்.! ஆயுள் காப்பீடு வாங்கும்போது இந்த தவறுகள செய்யாதீங்க.. இல்லைன்னா இழப்பு தான்.!
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
Embed widget