மேலும் அறிய

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும்.

தமிழ்நாட்டிலேயே சரக்கு பெட்டகம் கையாளுவதில் 2வது பெரிய துறைமுகமான வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆண்டுக்கு 1.17 மில்லியன் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டு உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2021-22-ம் நிதியாண்டில் 7.81 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகத்தின் சரக்கு பெட்டக போக்குவரத்தின் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் 6 சதவீதம் ஆகும்.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25-ம் ஆண்டில் 1.16 மில்லியன் சரக்கு பெட்டகங்களும், 2034-35-ம் ஆண்டுகளில் 2 மில்லியன் சரக்கு பெட்டகங்களும் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்கனவே 2 சரக்குபெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஒரு சரக்கு பெட்டகம் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இதற்காக இந்திய அரசின் பொது-தனியார் கூட்டமைப்பு கொள்கையின் படி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தால் டெண்டர் கோரப்பட்டது. இதில் ஜெ.என்.பக்ஸி போர்ட் லாஜஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம், தூத்துக்குடி இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனம் மூலம் வ.உ.சி துறைமுகத்தில் 3-வது சரக்குபெட்டக தளத்தை அமைக்க உள்ளது.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இதனை தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் 9-வது பொது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி சர்வதேச சரக்கு பெட்டக முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், ஜே.எம்.பக்ஸிபோர்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் துரவ் கோடக் ஆகியோர் கையெழுத்திட்டனர். வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை எந்திரபொறியாளர் வி. சுரேஷ் பாபு, தலைமை ஆலோசனை அதிகாரி தமல் ராய், பெருநிறுவன விவகார தலைவர் சந்தீப் வாத்வா, தலைமை செயல்பாடு அதிகாரி கிருஷ்ணதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும். இதன் கட்டுமான பணிகள் 21 மாதங்களில் முடிவடைந்து டிசம்பர் 2024 மாதம் பயன்பாட்டுக்க வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் கூறும் போது, புதிதாக அமைக்கப்பட உள்ள சரக்கு பெட்டக முனையம் 370 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டு இருக்கும். 8 ஆயிரம் சரக்கு பெட்டகங்கள் ஏற்றி வரும் பெரிய கப்பல்களையும் இந்த தளத்தில் கையாள முடியும். இந்த வசதி மூலம் வர்த்தக முதலீடு பெறுவதற்கு ஏதுவாக அமைவது மட்டுமின்றி தென்தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்க வழிவகுக்கும் என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget