மேலும் அறிய

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும்.

தமிழ்நாட்டிலேயே சரக்கு பெட்டகம் கையாளுவதில் 2வது பெரிய துறைமுகமான வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் ஆண்டுக்கு 1.17 மில்லியன் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டு உள்ளது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2021-22-ம் நிதியாண்டில் 7.81 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகத்தின் சரக்கு பெட்டக போக்குவரத்தின் ஒருங்கிணைந்த வருடாந்திர வளர்ச்சி விகிதம் 6 சதவீதம் ஆகும்.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25-ம் ஆண்டில் 1.16 மில்லியன் சரக்கு பெட்டகங்களும், 2034-35-ம் ஆண்டுகளில் 2 மில்லியன் சரக்கு பெட்டகங்களும் கையாளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வ.உ.சி. துறைமுகத்தில் ஏற்கனவே 2 சரக்குபெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஒரு சரக்கு பெட்டகம் முனையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இதற்காக இந்திய அரசின் பொது-தனியார் கூட்டமைப்பு கொள்கையின் படி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தால் டெண்டர் கோரப்பட்டது. இதில் ஜெ.என்.பக்ஸி போர்ட் லாஜஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நிறுவனம், தூத்துக்குடி இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனம் மூலம் வ.உ.சி துறைமுகத்தில் 3-வது சரக்குபெட்டக தளத்தை அமைக்க உள்ளது.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இதனை தொடர்ந்து வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் 9-வது பொது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி சர்வதேச சரக்கு பெட்டக முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில், ஜே.எம்.பக்ஸிபோர்ட்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குனர் துரவ் கோடக் ஆகியோர் கையெழுத்திட்டனர். வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை எந்திரபொறியாளர் வி. சுரேஷ் பாபு, தலைமை ஆலோசனை அதிகாரி தமல் ராய், பெருநிறுவன விவகார தலைவர் சந்தீப் வாத்வா, தலைமை செயல்பாடு அதிகாரி கிருஷ்ணதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தனியார் வசமாகும் சரக்கு பெட்டக முனையம்

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், சரக்குப் பெட்டக முனையம் ரூ.434.17 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இதனால், துறைமுகம் கூடுதலாக ஆண்டுக்கு 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கான வசதியை பெறும். இதன் கட்டுமான பணிகள் 21 மாதங்களில் முடிவடைந்து டிசம்பர் 2024 மாதம் பயன்பாட்டுக்க வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் கூறும் போது, புதிதாக அமைக்கப்பட உள்ள சரக்கு பெட்டக முனையம் 370 மீட்டர் நீளமும் மற்றும் 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டு இருக்கும். 8 ஆயிரம் சரக்கு பெட்டகங்கள் ஏற்றி வரும் பெரிய கப்பல்களையும் இந்த தளத்தில் கையாள முடியும். இந்த வசதி மூலம் வர்த்தக முதலீடு பெறுவதற்கு ஏதுவாக அமைவது மட்டுமின்றி தென்தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்க வழிவகுக்கும் என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Embed widget