மேலும் அறிய

புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

இளஞ்சிறார் உட்பட உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த இளஞ்சிறார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

தூத்துக்குடி சாந்திநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (60). இவர் சிதம்பரநகரில் நகைக்கடை நடத்தி வருகிறார். அதே கடையில் தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள் செய்து கொடுக்கும் பட்டறையும் வைத்து உள்ளார். நேற்று இரவு முருகன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்ற போது, அங்கு இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடையில் ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 3கிலோ வெள்ளிப்பொருட்கள், 2½ பவுன் ஐம்பொன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு 

அதே நேரத்தில் லாக்கரில் இருந்த சுமார் 15 கிலோ வெள்ளிப் பொருட்கள் பாதுகாப்பாக இருந்தது. இதுகுறித்து உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகைக்கடையின் பக்கவாட்டில் உள்ள சிறிய சந்து பகுதியில் இருந்து கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் வகையில் துளையிடப்பட்டு இருந்தது. அந்த வழியாக கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த வெள்ளிப்பொருட்களை கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

இதைத்தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுண் டிஎஸ்பி (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடினர். சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

விசாரணையில் தூத்துக்குடி  முனியசாமிபுரம் தொடர்ச்சி,  லோகியா நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் முனியசாமி என்ற குட்டி , பிரையண்ட் நகர் 4வது தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் மகன் சதீஷ் என்ற மோகன் , லெவிஞ்சிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் சுடலையாண்டி , இளஞ்சிறார் உட்பட உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். நகை கடையில் வெள்ளி பொருட்களை திருடிய இளஞ்சிறார் உட்பட 4 பேரையும் புகார் அளித்த 4 மணி நேரத்தில் கைது செய்து திருடுபோன வெள்ளி பொருட்களை மீட்ட தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
Donald Trump: புகைப்படத்துடன் ஆணுறை.. பெண்களுடன் ஜாலி போஸ்.. பிளேபாய் ட்ரம்ப்!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget