மேலும் அறிய

புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

இளஞ்சிறார் உட்பட உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நகைக்கடை சுவரில் துளையிட்டு 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்த இளஞ்சிறார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

தூத்துக்குடி சாந்திநகர் 1-வது தெருவை சேர்ந்தவர் முருகன் (60). இவர் சிதம்பரநகரில் நகைக்கடை நடத்தி வருகிறார். அதே கடையில் தங்கநகைகள், வெள்ளிப்பொருட்கள் செய்து கொடுக்கும் பட்டறையும் வைத்து உள்ளார். நேற்று இரவு முருகன் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்ற போது, அங்கு இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. கடையில் ரேக்குகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 3கிலோ வெள்ளிப்பொருட்கள், 2½ பவுன் ஐம்பொன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு 

அதே நேரத்தில் லாக்கரில் இருந்த சுமார் 15 கிலோ வெள்ளிப் பொருட்கள் பாதுகாப்பாக இருந்தது. இதுகுறித்து உடனடியாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி எஸ்பி பாலாஜி சரவணன், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நகைக்கடையின் பக்கவாட்டில் உள்ள சிறிய சந்து பகுதியில் இருந்து கடையின் சுவரில் ஒரு ஆள் நுழையும் வகையில் துளையிடப்பட்டு இருந்தது. அந்த வழியாக கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த வெள்ளிப்பொருட்களை கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

இதைத்தொடர்ந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுண் டிஎஸ்பி (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடினர். சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


புகார் அளித்த 4 மணி நேரத்தில் 4 பேர் கைது - ரூ.1, 88,500 மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு

விசாரணையில் தூத்துக்குடி  முனியசாமிபுரம் தொடர்ச்சி,  லோகியா நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் முனியசாமி என்ற குட்டி , பிரையண்ட் நகர் 4வது தெருவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் மகன் சதீஷ் என்ற மோகன் , லெவிஞ்சிபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் சுடலையாண்டி , இளஞ்சிறார் உட்பட உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ வெள்ளியை பறிமுதல் செய்தனர். நகை கடையில் வெள்ளி பொருட்களை திருடிய இளஞ்சிறார் உட்பட 4 பேரையும் புகார் அளித்த 4 மணி நேரத்தில் கைது செய்து திருடுபோன வெள்ளி பொருட்களை மீட்ட தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்

தலைப்பு செய்திகள்

"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget