மேலும் அறிய

திருச்செந்தூரில் பக்தரின் செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தரின் செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தரின் செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐம்பது நாட்களிலேயே தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் அதிரடி உத்தரவிட்டார்.


திருச்செந்தூரில் பக்தரின்  செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மார்ச் 23-ம் தேதி தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த ஹரிஹரன்(25) என்பவர் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது ஹரிஹரன் கடலில் புனித நீராடி விட்டு அங்குள்ள நாழிக்கின்ற்றில் புனித நீராட செல்லும் போது அவரது தோல் பையில் ரூ.36,000/- மதிப்புள்ள செல்போனை வைத்துவிட்டு, நாழிகிணற்றில் குளித்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது அவரது செல்போன் திருடுபோனது தெரியவந்தது.



திருச்செந்தூரில் பக்தரின்  செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை

இதுகுறித்து திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் ஹரிகரன் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் திருச்சி மாவட்டம், மணக்கால் லால்குடி பகுதியை சேர்ந்த பாலாஜி (26) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது திருச்செந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் பக்தரின் செல்போனை திருடிய பாலாஜிக்கு மூன்று மாத சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிபதி வரதராஜன் அதிரடி உத்தரவு பிறப்பித்து தீர்ப்பு வழங்கினார். காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐம்பது நாட்களிலேயே செல்போன் திருடிய வழக்கில் பாலாஜிக்கு அதிகபட்ச தண்டணையாக மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூரில் பக்தரின்  செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை

இதேபோன்று திருச்செந்தூரில் இருச்சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்களுக்கு 15 மாத காலம் சிறைத்தண்டனை விதித்து திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திரச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இந்த நிலையில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 26- ம் தேதி திருச்செந்தூரிலிருந்து குலசை செல்லும் சாலையில் அமைந்துள்ள எஸ்.கே. நகரை சேர்ந்த மந்திரம்(53) என்பவர் வீட்டின் முன்பு இரவு நிருத்திருந்த அவரது இருசக்கர வாகனம் திருடு போனது. இது குறித்து மந்திரம் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


திருச்செந்தூரில் பக்தரின்  செல்போனை திருடியவருக்கு 3 மாத சிறை தண்டனை

விசாரணையில் திருச்செந்தூர் பகுதியில் பல்வேறு இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த திருநெல்வேலி சேர்ந்த ரசூல், முடிவைத்தானேந்தலை சேர்ந்த மாடசாமி, தூத்துக்குடி புதுக்கோட்டை சேர்ந்த முத்துகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகன திருட்டு வழக்கு திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் இன்று திருச்செந்தூர் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்த ரசூல் - க்கு 8 மாத சிறை தண்டனையும், மாடசாமிக்கு 4- மாத சிறை தண்டனையும், முத்துகிருஷ்ணனுக்கு 3- மாத சிறை தண்டனையும் என தனித்தனியே தண்டனையை பிறப்பித்து குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வரதராஜன் உத்தரவிட்டார். இருசக்கர வாகனம் திருடி விற்பனை செய்த கூட்டாளிகள் மூவருக்கும் முறையே 15 மாத காலம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டு, மூவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget