தூத்துக்குடி & திருநெல்வேலி: நாளை மின் தடை! உங்கள் பகுதியில் மின்சாரம் இருக்குமா? முக்கிய அறிவிப்பு!
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மின்பகிர்மான வட்டம் நகர்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் நாளை 23.9.2025, செவ்வாய்க்கிழமையன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர் சிப்காட் வளாகம், திரவியரத்தினநகர், அசோக்நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ்நகர் சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலணி, EB காலனி, ஏழுமலையான்நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள்,அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால்நகர், பத்திநாதபுரம் சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன்நகர், சோரிஸ்புரம் மதுரை பைபாஸ் ரோடு, ஆசிர்வாதநகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம் கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர்நகர், ராஜரத்தினநகர், பாலையாபுரம், வி.எம்.எஸ்.நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜிநகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம்,
ஜோதிநகர் பால்பாண்டிநகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ்நகர், NGO காலனி, அன்னைதெரசாநகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம் பாரதிநகர், புதூர்பாண்டியாபுரம் மெயின் ரோடு, டிமார்ட், கிருபைநகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் திருநெல்வேலி நகர்ப்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தியாகராஜநகர் மற்றும் தச்சநல்லூர் துணைமின் நிலையங்களில் நாளை 23.9.2025, செவ்வாய்க்கிழமையன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறயிருப்பதால் பின்வரும் பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தியாகராஜநகர், மகாராஜாநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், I.O.B.காலனி, தாமிரபதி காலனி, மல்லிகா காலனி, ஸ்ரீராமன்குளம், AR Line, கோரிப்பள்ளம், ரயில்வே பீடர் ரோடு, EB காலனி, ராஜேந்திரன்நகர், ராம்நகர், காமராஜர் சாலை, அன்புநகர், என்.எச்.காலனி, சித்தார்த்நகர் மற்றும் லக்கி காலனி. தச்சநல்லூர், நல்மேய்ப்பர்நகர், செல்வவிக்னேஷ்நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்கியநகர், தெற்கு பாலபாக்கியநகர், மதுரை ரோடு, திலக்நகர், பாபுஜி நகர், சிவந்திநகர், கோமதிநகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம் மற்றும் இருதயநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






















