மேலும் அறிய

பழிக்குப் பழியாக நடந்த கொடூர கொலை! ஜாமீனில் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தூத்துக்குடியில் பரபரப்பு

மெஞ்ஞானபுரம் வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சினிமா பாணியில் காரை மோதவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அடுத்துள்ள தாமரைமொழி பகுதியைச் சேர்ந்தவர் கந்தையா இவருக்கு வயது 48. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடும்ப முன் பகை காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரும், அரசப்பன் என்பவரின் மகனுமான சிவசூரியன்(34) என்பவரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிவசூரியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் அக்டோபர் 8ம் தேதி சிவசூரியன் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போட  நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இன்று காலையில் தட்டார்மடம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார். அங்கு போலீசார் அவரை மாலையில் வந்து கையெழுத்து போடுமாறு கூறியுள்ளனர். உடனே சிவசூரியன் அங்கிருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவருடன் அவரது அண்ணன் சின்னதுரையும் சென்றுள்ளார்.


பழிக்குப் பழியாக நடந்த கொடூர கொலை! ஜாமீனில் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தூத்துக்குடியில் பரபரப்பு

மெஞ்ஞானபுரம் வேப்பங்காடு அந்தோனியார் கெபி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது சினிமா பாணியில் காரை மோதவிட்டுள்ளனர். இதனால் இருவரும் கீழே சரிந்து விழுந்தனர். பின்னர் காரில் வந்தவர்கள் அரிவாளுடன் இறங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தோட்டத்திற்குள் ஓடினர். ஆனால் அந்த கும்பல் விடாமல் சிவசூரியனை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். அவரது அண்ணன் சின்னதுரைக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவசூரியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பழிக்குப் பழியாக நடந்த கொடூர கொலை! ஜாமீனில் வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி - தூத்துக்குடியில் பரபரப்பு

காயமடைந்த சின்னதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சிவசூரியன் பழிக்குப் பழியாக முன் பகை காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பாக நடுவக்குறிச்சியைச் சேர்ந்த ஆறுமுகம் (52), கார்த்திக் (26), முத்துபாண்டி (32), மற்றொரு கார்த்தி (25) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், ஆறுமுகம் என்பவர் சிவசூரியனால் கொலை செய்யப்பட்ட கந்தையாவின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடியில் ரெளடி கும்பல் மோதல்: வீட்டில் பதுக்கிய 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!
தூத்துக்குடியில் ரெளடி கும்பல் மோதல்: வீட்டில் பதுக்கிய 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் புதிய விதி: செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல்!
திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் புதிய விதி: செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல்!
காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்
காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget