மேலும் அறிய

முதல்வரை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறிய தூத்துக்குடி மக்கள்

எட்டயபுரம் ரோடு 3-வது ரெயில்வே கேட் மேம்பாலத்தில் இருந்து மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். உடனடியாக வெள்ள நீரை அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் வரலாறு காணாத அதிகனமழை பெய்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வெள்ள பாதிப்புகளை சரி செய்யவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு விரைந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைப்பது, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


முதல்வரை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறிய தூத்துக்குடி மக்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்து உள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக, மக்களின் வாழ்வாதார உதவிக்காவும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு கொடுத்தார். தொடர்ந்து அதிகாரிகளுடன் கானொலி காட்சி மூலம் நிவாரண பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து பணிகளை விரைவுபடுத்தினார்.


முதல்வரை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறிய தூத்துக்குடி மக்கள்

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு வந்தார்.தூத்துக்குடி மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து சேத விவரங்களையும், அவர்களின் கோரிக்கையையும் கேட்டறிந்தார். அவர்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


முதல்வரை பார்த்ததும் கண்ணீர் விட்டு கதறிய தூத்துக்குடி மக்கள்

இதனை தொடர்ந்து தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நிவாரண மையத்துக்கு வந்தார். அந்த மையத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லர்புரம், பிரையண்ட்நகர், அண்ணாநகர், ஆசிரியர் காலனி, ராஜீவ்நகர், சிலோன் காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்கள் சுமார் 600 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு நிவாரண மையத்தில் அளிக்கப்பட்டு வரும் மருத்துவ வசதிகள், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அந்த நிவாரண மையத்தில் தங்கி இருந்த மக்களுக்கு அரிசி, வேட்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட், ரொட்டி, பால்பவுடர், தண்ணீர் பாட்டில உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அதனை தொடர்ந்து எட்டயபுரம் ரோடு 3-வது ரெயில்வே கேட் மேம்பாலத்தில் இருந்து மாநகரில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டார். உடனடியாக வெள்ள நீரை அகற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதே போன்று குறிஞ்சிநகர், போல்பேட்டை பகுதியில் மழைநீர் சூழ்ந்து உள்ள பகுதிகளை பார்வையிட்டார். பொதுமக்களிடம் பாதிப்பு விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து ஆறுதல் கூறினார். வெள்ளநீரை அகற்றும் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Women Issue | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Coimbatore | ”பொம்பள பொறுக்கி நாயே..!HONEYMOON போறியா டா” சண்டை போட்ட முதல் மனைவி AIRPORT-ல் கத்தி கதறிய பெண்Vijay vs Udhayanidhi : ஜனநாயகன் vs பராசக்தி விஜய்யுடன் மோதும் உதயநிதி! அரசியல் ஆயுதமான சினிமாEPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
IPL 2025 SRH vs LSG: ஐதரபாத்தை ஊதித்தள்ளிய பூரண்! அசால்டாக அடிச்சு ஜெயிச்ச லக்னோ! கம்மின்ஸ் வியூகம் காலி!
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
இது பாஜகவுக்கு ஆரம்பம்தான்! கை கோர்த்த முதலமைச்சர்கள் ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
TN Rain: இன்று இரவு இந்த 3 மாவட்டங்களில் மட்டும் மழை இருக்கும்- வானிலை மையம்
DMK Vs ADMK: மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை...
மேயருக்கு ரூ.40 லட்சத்தில் அறை... "குடிப்பதற்கு தண்ணீர் இல்லை... மேயருக்கு குழு குழு ரூம் தேவையா?" -அதிமுக ஆவேசம்
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
Shruthi Narayanan: சிவகார்த்திகேயனை துபாயில் சந்தித்த ஸ்ருதி நாராயணன்! எதற்காக? என்ன நடந்தது?
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
என்ன வேணும் உங்களுக்கு? காட்டமாக கேட்ட அப்பாவு! திகைத்துப் போன ஜி.கே.மணி!
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு:  எப்போது?
தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
TN TRB: இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Embed widget