மேலும் அறிய

கடைமடைக்கு வராத காவிரி.. கருகும் நிலையில் பயிர்கள்.. குடம் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்..!

ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் ஆற்றில் இருந்து பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் 10,000 ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் நிலைக்கு உருவாகியுள்ளது.

முத்துப்பேட்டை அருகே தண்ணீர் இல்லாமல் பத்தாயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் அபாயம். குடம் மூலமாக தண்ணீர் எடுத்து விவசாயிகள் வயலுக்கு தண்ணீர் தெளிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
 

தண்ணீர் பற்றாக்குறை

திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதில் நேரடி விதைப்பில் 62,000 ஏக்கர் பரப்பளவிலும் நடவுப் பணிகளில் ஒரு லட்சத்து ஆயிரத்து 130 ஏக்கர் பரப்பளவிலும் விவசாயிகள் தற்பொழுது தங்களது நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 ஆயிரம் ஏக்கர் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 93 ஆயிரம் ஏக்கர் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் தற்பொழுது நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் குருவை நெல் சாகுபடிகள் தண்ணீரில் இல்லாமல் கருகி வருகிறது.

கடைமடைக்கு வராத காவிரி.. கருகும் நிலையில் பயிர்கள்.. குடம் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்..!

கருகிய பயிர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடியும் 20000 ஏக்கர் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு, உப்பூர், தில்லைவிலாகம், இடும்பாவனம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்த பகுதி விவசாயிகளுக்கு கோரையாறு மூலமாக பாசனத்தை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடை பகுதியான முத்துப்பேட்டை பகுதிக்கு ஒரு மாதத்திற்கு பின்பு தான் வந்து சேர்ந்தது. வந்த தண்ணீரும் ஆற்றில் தரையோடு தரையாக சென்றதால் குறுவை நெல் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன இதனால் விவசாயிகள் டிராக்டரை விட்டு உழவு அடித்து விட்டு மீண்டும் சம்பா நெல் சாகுபடி பணிகளை தொடங்கினர்.

கடைமடைக்கு வராத காவிரி.. கருகும் நிலையில் பயிர்கள்.. குடம் தண்ணீரை தெளிக்கும் விவசாயிகள்..!
 

குடம் தண்ணீரில் பாசனம்

இந்த நிலையில் சம்பா நெல் பயிர்கள் நேரடி விதைப்பு பணிகளாக இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் ஆற்றில் இருந்து பாசன வாய்க்காலுக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் ஆலங்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10,000 ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் நிலைக்கு உருவாகியுள்ளது.
 
இந்த நிலையில் விவசாயிகள் குடத்தின் மூலமாக ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தெளித்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நேரடியாக சென்று ஆய்வு செய்து முறை வைக்காமல் தண்ணீரை திறந்து விடுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஒரு ஏக்கருக்கு இதுவரை பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து முற்றிலுமாக விவசாயிகள் பாதிக்க கூடிய சூழல் உருவாகி உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கோவை, தேனி உட்பட 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை
கோவை, தேனி உட்பட 5 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை - வானிலை மையம் எச்சரிக்கை
மது, போதை இல்லாத தொகுதி உருவாகும்... த.வெ.க. MLA விக்னேஷின் மாஸ் அறிவிப்பு...
மது, போதை இல்லாத தொகுதி உருவாகும்... த.வெ.க. MLA விக்னேஷின் மாஸ் அறிவிப்பு...
மகளிர் உரிமைத்தொகை.. நீங்களே 28 மாசம் கழிச்சு தானே கொடுத்தீங்க? - திமுகவை விளாசும் தவெக குரூப்!
மகளிர் உரிமைத்தொகை.. நீங்களே 28 மாசம் கழிச்சு தானே கொடுத்தீங்க? - திமுகவை விளாசும் தவெக குரூப்!
KP Munusamy: “நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
“நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?
Tasmac New Rule | அடுத்தடுத்து செக்! TASMAC-ல் புதிய RULE..அதிரடி காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KP Munusamy: “நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
“நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
RJ Balaji:”படம் வரல, கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கின்றனர்” அழுதபடி சொன்ன இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
”படம் வரல, கருப்புக்கு வழிவிடாமல் பலர் மறிக்கின்றனர்” அழுதபடி சொன்ன இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி
Thirumavalavan: விசிக ஆஃபிஸ்க்கு சோஃபா வந்தது ஏன்? முதலமைச்சராக வந்த ஆஃபர்- திருமா பேட்டி!
Thirumavalavan: விசிக ஆஃபிஸ்க்கு சோஃபா வந்தது ஏன்? முதலமைச்சராக வந்த ஆஃபர்- திருமா பேட்டி!
TN Advocate General: கல்லூரி சீனியரை தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக நியமித்த CM விஜய் - யார் இந்த விஜய் நாராயண்?
TN Advocate General: கல்லூரி சீனியரை தமிழ்நாட்டின் அட்வகேட் ஜெனரலாக நியமித்த CM விஜய் - யார் இந்த விஜய் நாராயண்?
TVK MLA Ravisankar : ‘டாஸ்மாக் பாரில் மதுபோதையில் துறையூர் TVK MLA?’ ரவிசங்கர் சொன்னது என்ன?
‘டாஸ்மாக் பாரில் துறையூர் TVK MLA?’ விளக்கம் என்ன ?
Magalir Urimai Thogai: மகளிருக்கு 1,000 ரூபாய் எப்போது வழங்கப்படும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்
மகளிருக்கு 1,000 ரூபாய் எப்போது வழங்கப்படும்.? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்
CV Shanmugam: ’’இது அதிமுக ரத்தம்; தூசிகூட படாது, இதை செஞ்சிட்டுதான் கால் வைப்போம்’’- சூளுரைத்த சி.வி.சண்முகம்
CV Shanmugam: ’’இது அதிமுக ரத்தம்; தூசிகூட படாது, இதை செஞ்சிட்டுதான் கால் வைப்போம்’’- சூளுரைத்த சி.வி.சண்முகம்
Embed widget