மேலும் அறிய

வேளாண் சட்டத்திற்கு எதிரான முதல்வரின் அறிவிப்பு; பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு

வேளாண் சட்டத்திற்கு எதிரான முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பிற்கு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசிற்கு எதிராக மன்னார்குடியில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு அறிவித்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த ஆறு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியன் அவரது வீட்டில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது..

‛‛தமிழகத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா போராட்டக்குழு அறிவிப்பை ஏற்று இன்றைய தினத்தை கருப்பு தினமாக  பின்பற்றப்படுகிறது. அதனை அடையாளப்படுத்தும் விதமாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்றோடு டெல்லி போராட்டம் ஆறு மாத காலங்களை கடந்து விட்டது. உயிரை பணயம் வைத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வருகிறார்கள் அவர்களை அழைத்துப் பேச பிரதமர் மோடி மறுத்து வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
மாறாக போராட்டத்தை திசை திருப்பவும், கொச்சைப்படுத்தும் மோடி எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்திருக்கிறது. இனியும் காலம் கடத்தாமல் உடனடியாக அழைத்து பேசி சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசு முன்வர வேண்டும் என  வலியுறுத்துகிறோம். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற உத்திரவாதத்தை இன்றைய தினம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருப்பது வரவேற்க்கத்தக்கது. இது போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக வெளிவந்திருக்கிறது. இதன் மூலம் வேளாண் விரோத சட்டத்திற்கு எதிராக தென்னிந்தியாவில்  திருப்புமுனையை உருவாக்கும் என நம்புகிறோம். 

வேளாண் சட்டத்திற்கு எதிரான முதல்வரின் அறிவிப்பு; பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு

காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு ரூ 9 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகளை கடந்த மார்ச் மாதம் துவங்கி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தீவிரமடைந்த நிலையில் சட்டவிரோத அணை கட்டுமான பணியை கர்நாடகம் துவங்கியது.இதனை எதிர்த்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கடந்த மார்ச் 28ஆம் தேதி சத்தியமங்கலம் வழியாக மேகதாது அணையை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12ஆம் தேதி நேரடியாக மேகதாட்டு பகுதியை பார்வையிட்டு  7 பேர் கொண்ட குழு உண்மை நிலையை கண்டறிந்து கட்டுமான பணிகளுக்கு கட்டுமான பொருட்களை குவித்துள்ளது குறித்து ஆதாரத்தோடு பத்திரிக்கை, ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டோம். காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிட வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.தமிழக அரசு தடுத்து நிறுத்த சட்டப் போராட்டங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். 

இந்நிலையில் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் பத்திரிக்கை ஊடகங்களில் வந்த செய்தியின் அடிப்படையில் சட்டவிரோதமாக கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதற்கு நேரில் ஆய்வு செய்து உண்மை நிலையை ஜூலை 5ஆம் தேதிக்குள் அறிக்கையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தியாக வந்திருக்கிறது. 
எனவே இனியாவது காலம் தாழ்த்தாது உடனடியாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாகக் கூட்டி கர்நாடக அரசின் நயவஞ்சக நடவடிக்கைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்தும் வரையிலும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்  போராட்டம் ஓயாது,’’ என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

AIADMK Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
Ideas of India 2026: ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கு - திறனும் & எதிர்காலமும் - 5வது எடிஷன்
Ideas of India 2026: ABP நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா கருத்தரங்கு - திறனும் & எதிர்காலமும் - 5வது எடிஷன்
ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம் - டி.டி.வி தினகரன் தேர்தல் நம்பிக்கை !
ஜெயலலிதாவின் தொண்டர்கள் 99.9% ஓர் அணியில் திரண்டு உள்ளோம் - டி.டி.வி தினகரன் தேர்தல் நம்பிக்கை !
மயிலாடுதுறை தீமிதி திருவிழாவில் பரபரப்பு: தவெக கொடியுடன் தீக்குண்டத்தில் இறங்கிய இளைஞரால் சலசலப்பு..
மயிலாடுதுறை தீமிதி திருவிழாவில் பரபரப்பு: தவெக கொடியுடன் தீக்குண்டத்தில் இறங்கிய இளைஞரால் சலசலப்பு..
ABP Premium

வீடியோ

Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho
Kerala Bus Fire Accident|ஊசலாடிய 35 உயிர்கள்!நடுரோட்டில் தீப்பற்றிய பேருந்துகேரள மக்கள் மாஸ் சம்பவம்
PTR Palanivel Thiagarajan |”ஸ்டாலின் வாய்ப்பளித்தால்” விருப்ப மனு கொடுத்த PTR! தேர்தலில் போட்டி ஏன்?
Chinmayi | கேரள சர்ச்சை வீடியோ ஆண்களுக்கு SUPPORT செய்த GOSU கொதித்தெழுந்த சின்மயி | Kerala Issue
DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
GOLD AND SILVER RATE TODAY : அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
அதிரடியாக ரூ.10,000 சரிந்தது .! இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன தெரியுமா.?
IND T20 World Cup: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..! ஊசலாடும் இந்தியாவின் கனவு - ஸ்கை பாய்ஸ்க்கான வாய்ப்புகள்
IND T20 World Cup: ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..! ஊசலாடும் இந்தியாவின் கனவு - ஸ்கை பாய்ஸ்க்கான வாய்ப்புகள்
Crime: ”தந்தை சொன்ன அட்வைஸ்” துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த 21 வயது மகன் - மகள் கண்முன்னே கொடூரம்
Crime: ”தந்தை சொன்ன அட்வைஸ்” துண்டுகளாக வெட்டி பார்சல் செய்த 21 வயது மகன் - மகள் கண்முன்னே கொடூரம்
Top 10 News Headlines: பள்ளி பேருந்து விபத்து, ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் 7 பேர் பலி, ஈரான் தாக்குதல்-ட்ரம்ப் மறுப்பு - 11 மணி செய்திகள்
பள்ளி பேருந்து விபத்து, ஏர் ஆம்புலன்ஸ் விபத்தில் 7 பேர் பலி, ஈரான் தாக்குதல்-ட்ரம்ப் மறுப்பு - 11 மணி செய்திகள்
Galaxy S26 Ultra vs iPhone 17 Pro Max: ஆப்பிளை தூக்கி சாப்பிடும் சாம்சங்.! ஐபோன் 17 Pro மேக்ஸைவிட கேலக்ஸி S26 Ultra-வில் அசத்தல் அம்சங்கள்
ஆப்பிளை தூக்கி சாப்பிடும் சாம்சங்.! ஐபோன் 17 Pro மேக்ஸைவிட கேலக்ஸி S26 Ultra-வில் அசத்தல் அம்சங்கள்
TN Roundup: ”பொய் சொன்ன தவெக” சென்னை ரயில்கள் மேலும் குறைப்பு, தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ”பொய் சொன்ன தவெக” சென்னை ரயில்கள் மேலும் குறைப்பு, தங்கம் விலை - தமிழகத்தில் இதுவரை
Chennai Electric Train Issue: சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கு ஷாக்.! மேலும் குறைக்கப்பட்ட சேவை எண்ணிக்கை; அவதி
சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கு ஷாக்.! மேலும் குறைக்கப்பட்ட சேவை எண்ணிக்கை; அவதி
Embed widget