மேலும் அறிய

இடு பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோடை சாகுபடியை கைவிட நீடாமங்கலம் விவசாயிகள் முடிவு

உர விலை ஏற்றம், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு, ரசாயன உரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் மண்வளம் பாதிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என 3 போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினாலும் உரிய நேரத்தில் மழை பெய்யாத காரணத்தினால் மூன்று போக சாகுபடி என்பது ஒருபோக சாகுபடி ஆக மாறியது குறிப்பாக மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆழ்துளை கிணறுகளை அதிக அளவில் விவசாயிகள் பயன்படுத்தி அந்த பகுதிகளில் மட்டும் மூன்று போகம் சாகுபடி பணிகள் என்பது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் ஆண்டுதோறும் ஒரு லட்சம் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம் இந்த நிலையில் நீடாமங்கலம் வட்டாரத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள் இந்த நிலையில் இந்த ஆண்டு இடுபொருள்கள் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு கோடை நெல் சாகுபடி தவிர்க்க நீடாமங்கலம் வட்டார விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.


இடு பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோடை சாகுபடியை கைவிட நீடாமங்கலம் விவசாயிகள் முடிவு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா பகுதியில் விவசாயிகள் கோடை சாகுபடியை கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நீடாமங்கலம் தாலுகா செட்டி சத்திரம் கிராமத்தில் நடைபெற்றது. தாலுக்கா முழுவதும் 25 கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். உர விலை ஏற்றம், அறுவடை இயந்திரம் தட்டுப்பாடு, ரசாயன உரத்தை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் மண்வளம் பாதிப்பு போன்ற காரணங்களால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நீடாமங்கலம் தாலுகா முழுவதும் சுமார் 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கோடை சாகுபடி இனி நடைபெறாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.


இடு பொருட்கள் விலை உயர்வு எதிரொலி - கோடை சாகுபடியை கைவிட நீடாமங்கலம் விவசாயிகள் முடிவு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா முழுவதும் முப்போக சாகுபடி நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் எடுத்துள்ள இந்த முடிவானது மண் வளத்தை பாதுகாக்கும் என சூழலியல் ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹலோ இடுபொருட்கள் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது விவசாயிகள் கோடை சாகுபடியை தவிர்த்து இருக்கும் நிலையில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நிலையை தமிழக அரசுக்கு தெரிவித்து இடுபொருள்கள் விலை உயர்வு மற்றும் அறுவடை இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மதுரை வைகையை நாசமாக்கும் மருத்துவக் கழிவுகள்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் கபடி போட்டியில் பங்கேற்க தகுதியற்றவர்கள் - உயர்நீதிமன்ற கிளை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget