மேலும் அறிய

திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் திருவாரூரில் இன்று காலையில் இருந்து தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில்  கோடை வெயில் கடந்த 20 தினங்களுக்கு மேலாக வாட்டி வதைத்து வந்த நிலையில் பொதுமக்கள் கடும் வெயிலின் காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் திருவாரூர், கூத்தாநல்லூர் கொரடாச்சேரி, குடவாசல் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் இந்த மழை என்பது வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 


திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 இலட்சத்து 76 ஆயிரத்து 250 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி நடைபெற்றது. அதன் அறுவடை பணிகள் முழுமையாக முடிவடைந்து ஊடுபயிராக பயிறு உளுந்து சாகுபடியை திருவாரூர் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.  அதேபோன்று பணப் பயிர்களான பருத்தி சாகுபடியிலும் விவசாயிகள் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு வருகின்றனர்.  திருவாரூர்  மாவட்டத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 345 ஏக்கர்  பரப்பளவில் பயிறு உளுந்து சாகுபடி என்பது செய்ப்பட்டுள்ளது. இந்த அறுவடை பணிகள் என்பது தற்போது மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. தற்போது 50 சதவீதம் அளவில் பயிறு உளுந்து அறுவடை பணிகள் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வந்தது. குறிப்பாக இன்று காலை முதல் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை என்பது கொட்டி தீர்த்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் பயிறு உளுந்து அறுவடை பணிகள் என்பது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயகள் தெரிவித்துள்ளனர். 


திருவாரூரில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி; விவசாயிகள் வேதனை

இதேபோன்று பணப் பயிரான பருத்தி சாகுபடி என்பது திருவாரூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 695 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. பருத்தி பயிரிடுதல் நடைபெற்ற சமயத்தில் இரண்டு நாட்கள் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்டது.பின்னர் மீண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர். எனவே ஒருமுறை பகுதி விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள தற்போது பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர்  தேங்கி பருத்தி பயிர்கள் அழுகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
ABP Premium

வீடியோ

ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede
Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
India Germany Visa: அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
அப்பாடா, இனி பிரச்னையே இல்ல.! இந்தியர்களுக்கு இனிப்பான அறிவிப்பை வெளியிட்ட ஜெர்மனி; அது என்ன.?
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Strike: நெருங்கும் பொங்கல்; வெளியாகுமா அறிவிப்பு? ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? எதிர்பார்ப்பில் ஆசிரியர் கூட்டணி!
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
Teachers Protest: போராடும் ஆசிரியர்கள் மீது கஞ்சா வழக்கு; மிரட்டிய போலீஸ்- வைரலாகும் ஆடியோ! அராஜகத்தின் உச்சம்!
Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்
Tata Punch Facelift: சுட்டிப்பையன் அப்க்ரேடாகி வந்துட்டான்..! பஞ்ச் விலையில் ஆஃபர் - புது பவர்ட்ரெயின் ஆப்ஷன்
Tata Punch Facelift: அப்டேட்டில் அமர்க்களம்.. தாறுமாறான பாதுகாப்பு அம்சங்கள், பஞ்ச் புதுசு Vs பழசு, எப்படி இருக்கு?
Tata Punch Facelift: அப்டேட்டில் அமர்க்களம்.. தாறுமாறான பாதுகாப்பு அம்சங்கள், பஞ்ச் புதுசு Vs பழசு, எப்படி இருக்கு?
லாஸ்ட் சான்ஸ்.! பொங்கலுக்கு மதுரை, நெல்லை, தென்காசி செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு- முன்பதிவு எப்போது.?
லாஸ்ட் சான்ஸ்.! பொங்கலுக்கு மதுரை, நெல்லை, தென்காசி செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு- முன்பதிவு எப்போது.?
Affordable Bikes Under Rs.1 Lakh: ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள்ள நல்ல மைலேஜோட பைக் வாங்கணுமா.? அப்போ இந்த பட்டியல பாருங்க
ஒரு லட்சம் ரூபாய் பட்ஜெட்டுக்குள்ள நல்ல மைலேஜோட பைக் வாங்கணுமா.? அப்போ இந்த பட்டியல பாருங்க
Embed widget