மேலும் அறிய

world blood donor day: தொடர்ந்து ரத்ததானம் செய்யும் 8 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கிய தஞ்சை கலெக்டர்

உலக ரத்த கொடையாளர் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ரத்த தானம் செய்த 8 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

தஞ்சாவூர்: உலக ரத்த கொடையாளர் தினத்தை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து ரத்த தானம் செய்த 8 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருதை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கி பேசுகையில், அனைவரும் ரத்ததானம் செய்வோம் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

உலக ரத்த கொடையாளர் தினம்

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடத்திற்கான கருப்பொருள் "ரத்த நன்கொடையின் 20ம் ஆண்டு கொண்டாட்டம், ரத்த கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்! என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டு ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த கொடையாளர்களை கௌரவித்தல் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆகியவை நடந்தது.

ரத்த கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

இதில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து தொடர்ந்து ரத்த தானம் அளித்து வரும் ரத்தக் கொடையாளர்கள் டாக்டர் கணேஷ்குமார், ராஜா, விக்னேஷ், தனுஷ் குமார், நவீன், ஜெயப்பிரகாஷ், எஸ்.விக்னேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டி பேசியதாவது: ரத்த தானம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். சாலை விபத்துகளில் சிக்குபவர்கள் பலரும் ரத்தம் இல்லாமல் இறக்கும் நிலை ஏற்படுகிறது. பல்வேறு வசதிகள் உள்ள தமிழகத்தில் இது போன்ற விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையை தடுப்பதற்கு ரத்த தானம் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

ரத்ததானத்தால் பல உயிர்களை காப்பாற்றலாம்

ரத்ததானம் செய்தால் பல உயிர்களை காப்பாற்றலாம். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மருத்துவக் கட்டமைப்பு அதிக அளவில் உள்ளது. எனவே அனைவரும் ரத்ததானம் செய்வோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் என்றார்.


world blood donor day: தொடர்ந்து ரத்ததானம் செய்யும் 8 பேருக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கிய  தஞ்சை கலெக்டர்

இதில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், தாய் மாநில திட்ட மேலாளர் டாக்டர் மருது துரை, மருத்துவ மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கலைவாணி, குடும்ப நலத்துறை இணை இயக்குனர் டாக்டர் அன்பழகன், மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் டாக்டர் ஆறுமுகம், மருத்துவக் கல்லூரி மருத்துவக் கண்காணிப்பாளர் ராமசாமி,  நிலைய மருத்துவ அலுவலர் செல்வம், அமுதா வடிவு, உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முத்து மகேஷ், முகமது இத்ரியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரத்த தானம் செய்வோம் என்று உறுதி மொழி ஏற்பு

தொடர்ந்து ரத்தத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு தன்னார்வமாக ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து எனது குடும்ப உறுப்பினர்கள். நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்.

ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும் போது இனம், மதம் பாகுபாடின்றி ரத்த தானம் செய்வேன். எந்த உயிர் இழப்பும் ஏற்படாதிருக்க தன்னார்வமாக இரத்த தானம் செய்வேன் என உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணம் மற்றும் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை உட்பட 4 அரசு இரத்த மையங்கள் செயல்பட்டு வருகிறது. 2023-24ம் ஆண்டில் இம்மாவட்டத்தில் 198 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு 25366 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

நிகழ்ச்சிகளை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி டாக்டர் வேல்முருகன் ஒருங்கிணைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget