மேலும் அறிய

திரும்பபெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - 108 தேங்காய் உடைத்து விநாயகருக்கு நேர்த்திக்கடன்

’’புதிய மின் திருத்த சட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற கோரிக்கை’’

இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், நுகர்வோர்களுக்கு, விரோதமாக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ளவதாக பிரதமர் மோடி முடிவு எடுத்து அறிவித்ததற்கு கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் மத்திய அரசு திட்டமிட்டு பெருநிறுவனங்களின் கைப்பாவையாகவும், பெரு நிறுவனங்களுக்கு முழு ஆதரவாக இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் பொது மக்கள் நலனுக்கு விரோதமாக கொண்டு வந்த மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை, இந்தியாவில் உள்ள விவசாயிகள், வேண்டாமென, கடும் குளிர். சுட்டுப் பொசுக்கும் வெயில், தொடர் மழையால் போராட்டம் கூடாரங்களில் மழைநீர் புகுந்து உறக்கங்களை துறந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன் 700க்கும் அதிகமான விவசாயிகளின் உயிர்களை இழந்துள்ளனர்.


திரும்பபெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - 108 தேங்காய் உடைத்து விநாயகருக்கு நேர்த்திக்கடன்

இந்த நிலையில் வேளாண் விரோத  மூன்று கருப்புச் சட்டங்களை முற்றிலுமாக விலக்கிக் கொண்டுள்ளது. போராடும் உறவுகளின் மீது பிரதமர் மோடி, நற்சிந்தனை, நல்லெண்ணம் ஏற்பட்டு அவரையும் அவர் சார்ந்த வழிநல்வழிப்படுத்தி அருள வேண்டும் என வழிபாடு நடத்தி கடந்த 2020 செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் உள்ள விநாயகர் கோவிலில்,  விவசாயிகள்  தேங்காய்களை உடைத்து வேண்டுதல் வழிபாடு செய்தனர். அதே நாளில் இந்திய குடியரசு தலைவர், பிரதமர் மோடி ஆகியோருக்கு இது குறித்து கடிதம் அனுப்பட்டது.


திரும்பபெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - 108 தேங்காய் உடைத்து விநாயகருக்கு நேர்த்திக்கடன்

 கடந்த 26.1.2021 அன்று குடியரசு தினத்தன்று, டெல்லியை நோக்கி நடைபெற்ற டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த விவசாயிகளான சுவாமிமலை சுந்தரவிமலநாதன், அய்யாரப்பன், இளங்கோ, இளவரசன் ஆகியோர் கும்பகோணம் ரயில் நிலையத்திலுள்ள விநாயகர் கோயிலில் மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றால், சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்வேன் என்று வேண்டி, உறுதிமொழி எடுத்து கொண்டு, போராட்டத்திற்கு டெல்லிக்கு சென்றனர்.


திரும்பபெறப்பட்ட வேளாண் சட்டங்கள் - 108 தேங்காய் உடைத்து விநாயகருக்கு நேர்த்திக்கடன்

இந்நிலையில், இந்திய விவசாயிகள்,  இந்தியர்கள் மீது உண்மையான நல்லுணர்வு, நல்லெண்ணம், நற்சிந்தனை ஏற்பட்டு போராடிய அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரும், ஐக்கிய உழவர் முன்னணியினரும், அனைத்து விவசாயிகளும், தன்னுயிரை அர்ப்பணித்த 600க்கும் அதிகமான விவசாயிகளின் தியாகங்கள் உண்மையிலேயே உணர்வுப்பூர்வமானது, போராடியவர்கள் எல்லாம் உண்மையான  விவசாயிகள் தான் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி கடந்த 19.11.2021, மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறப்படும் என அறிவித்துள்ளார்.

அவருக்கு விவசாயிகள், மீது நல்லெண்ணம் ஏற்படுத்திய, கும்பகோணம் ரயில் நிலையத்திலுள்ள விநாயகர் கோயில் உள்ள கணபதி பிள்ளையாருக்கு, வேண்டுதலை நிறைவேற்றியதற்காக, நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு குழந்தை வட்டத் தலைவர் கலியபெருமாள் தலைமை வகித்தார் கலியமூர்த்தி சாமிநாதன் முன்னிலை வகித்தனர் சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து புதிய மின் திருத்த சட்டத்தையும், மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு தேசிய கொடி ஏந்தி கோஷமிட்டனர்.

தலைப்பு செய்திகள்

சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
மத்திய அரசுக்கு எதிராக 10ல் ‘மறியல்’: தஞ்சையில் 4 மையங்களில் களமிறங்கும் தொழிற்சங்கங்கள்–விவசாயிகள்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Embed widget