மேலும் அறிய

எப்போங்க திறப்பீங்க... 4 ஆண்டுகள் கடந்துடுச்சு: ஏக்கத்துடன் தஞ்சை மக்கள் எதிர்பார்த்திருப்பது எதற்காக?

தஞ்சை மக்களின் பொழுதுபோக்கு இடமான சிவகங்கை பூங்கா திறப்பது எப்போது என்ற ஏக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மக்களின் பொழுதுபோக்கு இடமான சிவகங்கை பூங்கா திறப்பது எப்போது என்ற ஏக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். காரணம் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதுதான். 

மனநிம்மதியை தரும் இடமாக இருந்தது

தஞ்சை மக்களுக்கு மனசுக்கு மிகப்பெரிய மன நிம்மதியை தரும் இடமாக இருந்த சிவகங்கை பூங்கா பூடப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்தும் திறக்கப்படாத நிலையே நீடிக்கிறது. இதனால் மாலை வேளையில் விடுமுறை நாட்களில் மக்கள் பொழுதுபோக்க வேறு இடங்கள் இல்லாததும் ஒரு காரணம். இதனால் சிவகங்கை பூங்கா இதுநாள் வரை திறக்கப்படாது ஏன் என்று பொதுமக்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.


எப்போங்க திறப்பீங்க... 4 ஆண்டுகள் கடந்துடுச்சு: ஏக்கத்துடன் தஞ்சை மக்கள் எதிர்பார்த்திருப்பது எதற்காக?

20 ஏக்கரில் பிரமாண்டமாக அமைந்துள்ளது

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் அருகில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா சுமார் 20 ஏக்கரில் 1871ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவின் உள்ளே 10 ஏக்கரில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட நீர்வற்றா குளமுமான சாமந்தன் குளமும் அமைந்துள்ளது. இப்பூங்காவில் பல ஆண்டுகள் பழமையான ஏராளமான மரங்கள் நிறைந்து இயற்கை நிழற் குடையாக சூழ்ந்திருக்கும். மான்கள், நரி, முள்ளம்பன்றி, சீமை எலி, முயல், உள்ளிட பல்வேறு வகையான மிருகங்களும், புறா, மயில், கிளிகள் என பறவைகளும் வளர்க்கப்பட்டு வந்தது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு

சிறுவர்களுக்கான ரயில், படகு சவாரி, நீச்சல் குளம், நீர்சறுக்கு விளையாட்டுகளும் இருந்தன. தஞ்சை மாவட்ட மக்களின் பேவரைட் பூங்காவாக இந்த சிவகங்கை பூங்கா திகழ்ந்து வந்தது. மாலை நேரத்தில் குடும்பம் குடும்பமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சென்ற பெருமை மிக்கதுதான் சிவகங்கை பூங்கா. இந்நிலையில் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 12 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு வசதிகளை அமைப்பதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் தொடங்கியது.  

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களில் விலங்குகள் பராமரிக்க கூடாது என சட்டம் உள்ளதால் பூங்காவில் உள்ள மான்கள் மற்றும் நரி, சீமை எலி, புறா ஆகியவற்றை இடமாற்றம் செய்யப்பட்டன. 

இடமாற்றம் செய்யப்பட்ட மான்கள்

பூங்காவில் இருந்த 41 மான்களையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனச்சரணாலயத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யபப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பூங்கா முழுவதும் அலங்கார மின் விளக்குகள், செயற்கை நீரூற்றுகள், சேதமடைந்த இடங்களில் சுற்றுச்சுவர்கள் என பூங்காவில் பணிகள் முடிந்துவிட்டது. தற்போது இப்பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்களும், நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகளும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

வர்ணம் பூசும் பணியும் நிறைவடைந்தது

மேலும் இன்னும் ஏராளமான பணிகள் நிறைவு பெற்றது. நுழைவாயில் அமைக்கப்பட்டு வர்ணம் பூசும் பணியும் முடிவடைந்தது.  எனவே முழுமையாக பணி முடிந்த சிவகங்கை பூங்காவை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தஞ்சை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் நுழைவு கட்டணம் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் வருவாய் கிடைக்கும்.

மாலை நேரங்களில் தஞ்சை மக்கள் பொழுது போக்குவதற்கும், நடைபயிற்சி செய்வதற்கும் சிவகங்கை பூங்காவை பயன்படுத்துவர். ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்ற சீரமைப்பு பணி தற்போது முழுமையாக முடிவடைந்தும் திறக்கப்படாமல் இருப்பது தஞ்சை மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget