மேலும் அறிய

மாற்றுப்பயிரில் முத்திரை பதிக்கும் விவசாயிகள்... கோடை சாகுபடியில் ஆர்வம்

டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய முதன்மைச் சாகுபடிகளைத் தொடர்ந்து, பம்ப் செட் நீர் வசதி உள்ள பகுதிகளில் கோடை காலச் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வேங்கராயன்குடிக்காட்டில் டிராக்டர்கள் மூலம் கோடை சாகுபடிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாற்றுப்பயிர் சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான கோடை காலப் பயிர் சாகுபடிப் பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இதன்படி தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை சாகுபடிக்காக விளைநிலங்களை ஆயத்தப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய முதன்மைச் சாகுபடிகளைத் தொடர்ந்து, பம்ப் செட் நீர் வசதி உள்ள பகுதிகளில் கோடை காலச் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது வேங்கராயன் குடிக்காடு பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களைச் கோடை சாகுபடிக்காக வயல்களை சீரமைப்பதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

விளைநிலங்களில் உள்ள முந்தைய பயிர்களின் தாள்களை அழித்து, மண்ணை வளப்படுத்துவதற்காக டிராக்டர்கள் மற்றும் சுழற்கலப்பைகள் மூலம் ஆழ உழவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கோடையில் ஆழமாக உழுவதால் மண்ணின் கீழ் அடுக்கு மேலே கொண்டு வரப்பட்டு, மண் பொலபொலப்புத் தன்மை அடைகிறது.

மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து, நுண்ணுயிரிகளின் பெருக்கம் சீராகிறது. முந்தைய பயிர்களின் வேர்களில் தங்கியிருக்கும் பூச்சிகளின் முட்டைகளும், கூட்டுப்புழுக்களும் வெயிலின் தாக்கத்தால் அழிக்கப்படுகின்றன. தற்போது தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி வயல்களை உழும் பணிகள் நடந்து வருகிறது.

குறைந்த நீர் தேவையும், அதிக லாபமும் தரக்கூடிய பயிர்களைப் பயிரிட வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளதால், இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு மாற்றுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் உளுந்து, பச்சைப்பயறு மற்றும் எள் போன்ற பயிர்களைப் பயிரிடப் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி நிலத்தை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலரும் நெல் சாகுபடியையும் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து வேங்கராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: "தற்போது உழவுப் பணிகளை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக விதைப்பு மற்றும் நாற்று நடும் பணிகளுக்குத் தயாராகி வருகிறோம். கோடை சாகுபடிக்குத் தேவையான தரமான சான்றளிக்கப்பட்ட விதைகள், அடி உரங்களான டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் யூரியா போன்றவை தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
விவசாயிகளின் கொந்தளிப்பு... தஞ்சை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
சிபிஐ, இ.டி. விசாரணை வந்தாலே அவுட்... விஜய்யின் ஸ்ட்ரிக்ட் அரசியல் முடிவு!
சிபிஐ, இ.டி. விசாரணை வந்தாலே அவுட்... விஜய்யின் ஸ்ட்ரிக்ட் அரசியல் முடிவு!
இடைத்தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் எண்ட்ரி... திருச்சி அரசியலில் அனல் பறக்கும் சூழல்!
இடைத்தேர்தலுக்கு முன் முதல்வர் விஜய் எண்ட்ரி... திருச்சி அரசியலில் அனல் பறக்கும் சூழல்!
வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
வட்டாட்சியர் அலுவலகங்களில் பரபரப்பு... வரும் 4ம் தேதி தொடங்கும் ஜமாபந்தி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
Embed widget