மேலும் அறிய

ஒரத்தநாடு அருகே வேதபுரி வாய்க்காலில் 10 இடங்களில் உடைப்பு... இளம் சம்பா, தாளடி பயிர்களை சூழ்ந்த மழைநீர்

இதனால் அங்கு நடவு செய்து ஒரு மாதமே ஆன இளம் சம்பா. தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த மழையால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் ஒரத்தநாடு அருகே வேதபுரி வடிகால் வாய்க்காலில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் மழை நீர் புகுந்தது. இதனால் நாற்று நடவு செய்து ஒரு மாதமே ஆன இளம் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நாற்று நடவு செய்த இளம் சம்பா தாளடி பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே திருநல்லூர் கிராமத்தில் உள்ள வேதபுரி வடிகால் வாய்க்காலில் அதிக அளவிலான மழைநீர் செல்வதால், 10க்கும் மேற்பட்ட இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்பு காரணமாக மழைநீர் முழுவதும் அருகில் இருக்கும் விளைநிலங்களில் புகுந்துள்ளது. இதனால் அங்கு நடவு செய்து ஒரு மாதமே ஆன இளம் சம்பா. தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் 3 அடி ஆழத்திற்கு நீரில் மூழ்கியுள்ளன. நடவு, உரம் என ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்து கதிர் வரும் நிலையில், இந்த மழையால் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த வாய்க்காலை தூர்வாரக் கூறி பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் இந்த வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் உப்புண்டார்பட்டி, தெக்கூர், கரிக்காடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் தாளடி நெல் பயிர்கள் மழைநீர் புகுந்ததால் நீரில் மூழ்கியுள்ளது. நாட்டு வாய்க்காலில் மண்டி கிடக்கும் வெங்காய தாமரையால் மழை நீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரத்தநாடு தாலுக்காவிற்கு உட்பட்ட உப்புண்டார்பட்டி, தெக்கூர், கரிக்காடிப்பட்டி, பின்னையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான தாளடி நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. நடவு செய்து 30 நாட்கள் ஆன வயல்களில் உரங்கள் தெளிக்கப்பட்ட நிலையில் 3 நாட்கள் பெய்த மழையில் தண்ணீரில் கரைந்து விட்டதாக வேதனையுடன் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

நாட்டு வாய்க்கால் 4 ஆண்டுகளாக தூர்வாராத காரணத்தால் வெங்காய தாமரை செடிகள் புதர்போல் மண்டி இருப்பதால் மழைநீர் விளை நிலங்களுக்குள் புகுந்ததாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget