மேலும் அறிய

வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடந்த நிலையில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டால் , வெறிச்சோடி காணப்பட்டது

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து  பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை  சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டால் குறிப்பிட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்ததால், வெறிச்சோடி காணப்பட்ட கோயில்கள், வைணவ தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த 3 வது தலமாக போற்றப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடர்ந்து 22 நாட்கள் நடைபெற்று வருகிறது.


வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

இக்கோயிலில் பெருமாள் வைகுண்டத்தில் இருந்து நேரடியாக கருங்கல் ரதத்தில் வந்திறங்கியதாக ஐதீகம். இதனால் பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. இங்கு தனியாக சொர்க்கவாசல் கிடையாது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு வெகு விரைவு தரிசன சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதே போல்  12 ஆழ்வார்களும் உற்சவர் சாரங்கபாணியை வணங்கி தரிசனம் செய்வது போல் அலங்காரம் செய்திருந்தனர்.மூலவர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் கோமளவல்லி தாயார், ஆராவமுதன் பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர்.


வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

இதே போல்  நாதன்கோயிலிலுள்ள ஜெகநாதபெருமாள் கோயிலில்  அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் சேஷவாகனத்தில் சொர்க்கவாசல் எனப்படும் மூலவர் வாயிலில் வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மூலவர் ஜெகநாதபெருமாள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் திருவடி சேவை நேற்று நடைபெற்றது. அதேபோல் செண்பகவல்லித் தாயார் வைகுண்ட அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

இதேபோல் கும்பகோணம் சக்கரபாணி பெருமாள், ராமசுவாமி கோயில், பெரிய கடைத்தெரு தசாவதார பெருமாள், ராஜகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக  நடைபெற்றது.இதே போல் தஞ்சையில் உள்ள பெருமாள் கோயில்களில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு
தஞ்சை  108 வைணவ தலங்களில் மூன்றாவதான மணிகுண்றப்பெருமாள், நீலமேகப்பெருமாள், சிங்கப்பெருமாள், நாலுகால் மண்டபத்திலுள்ள பிரசன்ன வெங்கடேபெருமாள், கோதண்டராமசாமி பெருமாள் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன்  பிரசன்னவெங்கடேசபெருமாள் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.அதே போல் தஞ்சை மானம்புச்சாவடி வெங்கடேசபெருமாள் கோயில்,  நீலமேகப்பெருமாள் கோயில் ஆகியவற்றில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


வைகுண்ட ஏகாதசியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு

அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் அதிகாலை முதல் பெருமாளை தரிசனம் வருவார்கள்.அதனால் மிக நீண்ட வரிசையில் பக்தர்கள் சென்று தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா தொற்று பரவி வருவது எதிரொலியால் குறைவான பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்தனர்.இதனால் பெரும்பாலான கோயில்களில் வெறிச்சோடி காணப்பட்டது.

வைகுண்ட ஏகாதேசி - தருமபுரி ஸ்ரீபரவாசு தேவர் சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு

 

தலைப்பு செய்திகள்

நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
கஞ்சா கடத்திய 5 பேருக்கு தஞ்சை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 
தொழில்நுட்ப ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கணும்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு எதற்காக? 

வீடியோ

Kovai TVK Issue : பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்
Ariyalur Farmer Suicide : தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
Student Attack : +2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Kia Syros EV First Look: “டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
“டிசைன் அதே தான், ஆனா ஒரு சார்ஜுக்கு 500 கிமீ ஓடும்“ கியா சைரோஸ் EV எப்படி இருக்கு.? முதல் பார்வை இதோ
Embed widget