மேலும் அறிய

50 ஆண்டுகள் முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மீட்பு... ஏலத்தில் விடப்பட்டன

ட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே பார்த்த போது அங்கு இருந்த பாத்திரங்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரிய வந்தது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு பூட்டிக்கிடந்த கட்டிடத்தில் இருந்து பல வகை பாத்திரங்கள் எடுக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி 1958-ம்ஆண்டு தொடங்கப்பட்டது.  இந்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் செடி, கொடிகள் மண்டிக்காணப்பட்ட 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 2 கட்டிடங்கள் பூட்டியே கிடந்தன. இதைப்பார்த்த மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி அதனை சுத்தம் செய்து கட்டிடத்தில் என்ன உள்ளது என பார்வையிட உத்தரவிட்டார்.


50 ஆண்டுகள் முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மீட்பு... ஏலத்தில் விடப்பட்டன

அதன் பேரில் பொக்லைன் எந்திரம் மூலம் செடி, கொடிகள், புதர்கள் அகற்றும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் முடிவடைந்தவுடன் அங்கிருந்த கட்டிடங்களில் பூட்டு திறக்கப்பட்டு உள்ளே பார்த்த போது அங்கு இருந்த பாத்திரங்கள் அனைத்தும் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய பொருட்கள் என்பது தெரிய வந்தது. அனைத்து பாத்திரங்களும் செம்பு, பித்தளை, அலுமினியங்கள் போன்றவற்றால் ஆனது. அனைத்து பாத்திரங்களும் அதிக எடையிலும், மிகப்பெரிய அளவிலும் இருந்தது. தற்போதைய காலக்கட்டத்தில் இது போன்ற பாத்திரங்களை பார்ப்பது என்பது அரிது.

இந்த நிலையில் தமிழக அரசு தூய்மை திட்டம் 4.0 என்ற திட்டத்தை தொங்கி உள்ளது. இந்த திட்டத்தில் ஆஸ்பத்திரிகளில் பழமையான, உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் பொருட்கள், பாத்திரங்கள், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள், அட்டைப்பெட்டிகள் மற்றும் கழிவுகளை உடனடியாக அகற்றுமாறும், நல்ல விலை போகும் பொருட்களை ஏலமிடுமாறும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து பாத்திரங்கள் பழமையானதாகவும், அரிதானதாகவும் இருந்ததால் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தொல்லியல் துறை அதிகாரிகள் வந்த ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த பொருட்களில் அதிக விலை உடைய செம்பு பொருட்கள், அலுமினியம் மற்றும் பித்தளை பொருட்கள் என்று தெரிய வந்தது. மேலும் இவை அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளவை என தெரிய வந்தது.

இதையடுத்து அரிதாக காணப்படும் அண்டா, இட்லி கொப்பரை, பால்கேன், கடாய், அலுமினிய டிபன்கேரியர், தண்ணீர் ஊற்றும் குவளை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அருங்காட்சியகத்தில் வைப்பது எனவும், மீதமுள்ள பொருட்களை ஏலமிடவும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் பொருட்களை தவிர மீதமுள்ள பொருட்கள் ஏலமிடப்பட்டன. இதன் மூலம் ரூ.9 லட்சம் மருத்துவக்கல்லூரிக்கு கிடைத்துள்ளது என்று முதல்வர் பூவதி தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
Embed widget