மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை.. சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேதனை..

திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மணலி, ஆலத்தம்பாடி, பாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததன் காரணத்தினால் மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர்.

மேலும் கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் விவசாயிகள் விளைநிலத்தில் தேங்கி இருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதன்பிறகு தற்போது சம்பா நெற்பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கும் பணிகளில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுக்கிரவாரகட்டளை என்கிற கிராமத்தில் தற்போது சம்பா விதைப்பு செய்து அதற்கான பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை.. சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேதனை..

இந்த நிலையில் தற்போது விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை என்பது காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக உரிய நேரத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதால் ட்ரோன்களை கொண்டு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆட்களை வைத்து மருந்து தெளிக்கும் பொழுது ஒரு ஏக்கருக்கு ரூ.700 முதல் 800 வரை செலவாகிறது என்றும் அதேசமயம் குறைந்த நேரத்தில் பணியை செய்ய முடிகிறது எனவும்  இந்த ட்ரோன் மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதற்கு ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வரை செலவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாய நிலங்களில் நெல் பயிர்கள் மீண்டும் மூழ்கும் நிலை உருவாகியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை.. சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வேதனை..

தொடர்ந்து இந்த மழை பெய்தால் பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை உருவாகும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆகவே மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அது மட்டும் இன்றி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், ஏற்கனவே குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து இருந்தால் அதனை வடிய வைப்பதற்கான நடவடிக்கை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் எனவும் மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருவதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Embed widget