மேலும் அறிய

சம்பந்தமில்லாத ஒருவரை உணவுத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்கள் - தமிழ்நாடு விவசாய சங்கம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் டெல்டா மாவட்டங்களாகும். எனவே இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தான் இதன் முக்கியத்துவம் தெரியும். ஆனால் சம்பந்தமில்லாத ஒருவரை உணவுத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்கள்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கைகளை கண்டித்து வரும் செப்டம்பர் 20ம் தேதி 1000 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவாரூரில் ஐ.என்.டி.யு‌. சி , சிஐடியு, ஏ ஐ டி யூ சி, ஏ ஐ சி சி டி யு, உள்ளிட்ட தொழிற்சங்கங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக தொழிற்சங்க  அமைப்புகள் இணைந்து நேற்று கூட்டாக தற்போதைய தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதித்தனர். இந்த விவாதம் குறித்து செய்தியாளர்களிடம் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சந்திரகுமார் கூறியதாவது: விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி தங்களுடைய நெல் கொள்முதல் செய்யப்படுவதற்காக கொண்டு வந்த அமைப்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி இதனை உருவாக்கினார். ஆனால் அவர் உருவாக்கிய கொள்கையை தவிர்த்து விட்டு, தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணிகளை தனியார்மயப்படுத்தி வருகிறது. கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும்  சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியிடத்துக்கு டெண்டர் விடப்படுகிறது. அதுபோல் திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகள் தனியார் வசம் ஒப்படைக்கப்படுகின்றன நவீன அரசி ஆலைகளில் இயக்குனர், உதவி இயக்குனர், மின்  இணைப்பாளர் ஆகிய பணிகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசமான நடவடிக்கைகளை ஏற்க முடியாது. தமிழக அரசு இதனை  கைவிட வேண்டும். 


சம்பந்தமில்லாத ஒருவரை உணவுத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்கள் - தமிழ்நாடு விவசாய சங்கம்

விவசாயிகள் எப்படி இந்த நுகர்வு பொருள் வாணிபக் கழகம் உருவாக ஒருங்கிணைந்து போராடினீர்களோ இதனை, நிலை நிறுத்திக் கொள்ளவும் போராட வேண்டிய நிலை தற்போது உருவாகி உள்ளது. எனவே வரும் செப்டம்பர் 20ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து கொள்முதல் நிலையங்கள், சேமிப்பு கிடங்குகள் நவீன அரிசி ஆலை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் நுகர்வோர் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரியும், காலி பணியிடங்களை நிரப்ப கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிறகும் தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில், ஒரு நாள் வேலை நிறுத்தம் அதனை தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். 


சம்பந்தமில்லாத ஒருவரை உணவுத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்கள் - தமிழ்நாடு விவசாய சங்கம்

மாநாட்டில் முன்னதாக பேசிய திமுக கூட்டணியில் உள்ள சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியை கடுமையாக சாடினார். அவர் பேசியதாவது: தமிழகத்தில் எப்போதும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தான் உணவுத்துறை அமைச்சராக நியமிப்பார்கள். ஆனால் முதன் முறையாக அதிகமாக காய்கறி உற்பத்தியும் பணப்பயிர் உற்பத்தியும் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சக்கரபாணியை எதற்காக நியமித்தார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. தமிழகத்தின் நெற்களஞ்சியம் டெல்டா மாவட்டங்களாகும். எனவே இந்த மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு தான் இதன் முக்கியத்துவம் தெரியும் ஆனால் சம்பந்தமில்லாத ஒருவரை உணவுத்துறை அமைச்சராக நியமித்துள்ளார்கள். தேர்வு செய்யும் உரிமை முதலமைச்சரிடம் இருக்கு என்பதற்காக பொருத்தமில்லாத ஒருவரை தேர்ந்தெடுப்பதன் மூலமாக என்ன மாதிரியான நிலைமைகள் ஏற்படும் என்பதற்கு இது ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என கடுமையாக சாடினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Embed widget