மேலும் அறிய

மின் கட்டணம் செலுத்தவில்லை.... அரசு கல்லூரியில் மின்சாரம் கட்.....மாணவர்கள் அவதி...!

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் காலை நேரத்தில் வரும் மாணவ, மாணவிகள் மூன்று மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதேபோல் மதியம் வரும் மாணவர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் அருகே கிடாரம்கொண்டானில் திருவிக அரசு கலைக் கல்லூரி மட்டுமே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. இதேபோன்று மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த இரண்டு இடங்களில் மட்டும் தான் அரசு கல்லூரிகள் என்பது இருந்து வந்தது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் வெகு தூரம் சென்று இந்த கல்லூரிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக கல்லூரி அமைக்க வேண்டும் என தொடர்ந்து இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் மாணவர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். அதன் அடிப்படையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் பாரதிதாசன் அரசு உறுப்பு கலை அறிவியல் கல்லூரி என்பது தொடங்கப்பட்டது.


மின் கட்டணம் செலுத்தவில்லை.... அரசு கல்லூரியில் மின்சாரம் கட்.....மாணவர்கள் அவதி...!

குறிப்பாக நன்னிலம் பகுதியில் ஏழை எளிய குடும்பத்தினர் அதிகளவில் வசித்து வந்த நிலையில் அந்த பகுதியில் கல்லூரி கொண்டுவரப்பட்டது மிகுந்த வரவேற்பு பெற்றது. அதன் அடிப்படையில் நன்னிலத்தில் அமையப்பட்ட கல்லூரியில் நன்னிலம் ஆண்டிபந்தல் சன்னாநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நன்னிலம் அரசு உறுப்பு கலை அறிவியல் கல்லூரியில் கடந்த 2021 மார்ச் மாதத்தில் இருந்து மின்கட்டணம் செலுத்தாத காரணத்தினால் மின்சாரத்தை துண்டித்து மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மாணவர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.


மின் கட்டணம் செலுத்தவில்லை.... அரசு கல்லூரியில் மின்சாரம் கட்.....மாணவர்கள் அவதி...!

இந்த கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை என 2300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நன்னிலம் அரசு உறுப்பு கலை கல்லூரியில் சுமார் 17 மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் பலமுறை கல்லு நிர்வாகத்திடம் தெரிவித்தோம் கல்லூரியிலிருந்து மின் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் மின்வாரிய அதிகாரிகள் கல்லூரிக்கு கொடுக்கப்படும் மின் இணைப்பை துண்டித்து உள்ளனர். ஒரு வாரம் விடுமுறையில் இருந்த மாணவ. மாணவிகள் இன்று கல்லூரிக்கு வந்தனர். தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் படிக்க முடியவில்லை எழுத முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு மின் இணைப்பை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சுழற்சி முறையில் நடைபெறும் இந்த கல்லூரி அதாவது காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் காலை நேரத்தில் வரும் மாணவ மாணவிகள் மூன்று மணி நேரம் மட்டும் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதேபோல் மதியம் வரும் மாணவர்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தஞ்சையில் இஞ்சி விலை கிடுகிடு உயர்வு! வரத்து குறைந்ததால் உச்சம்: இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
ரேஷன் அரிசி கடத்தினால் கைது மட்டும் இல்லை... குண்டர் சட்டமும் பாயும்!
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
பயமுறுத்தும் பட்டுப்போன மரம்... பள்ளி மாணவர்களுக்கு அபாயம்: வெட்டி அகற்ற வலியுறுத்தல்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்
சாலையை இரண்டாகப் பிரிக்கும் பள்ளம்! சித்திரக்குடி – ஆலக்குடி சாலையில் விபத்து அபாயம்

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget