மேலும் அறிய

திருவாரூரில் சம்பா சாகுபடி செய்ய கடும் உரத்தட்டுப்பாடு...!

’’திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கான யூரியாவின் தேவை 16,376 மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில் தற்போதைய கையிருப்பு 2,956 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது’’

காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று போக சாகுபடிகளான குறுவை, சம்பா, தாளடி போன்ற நெற்பயிர் சாகுபடிகள் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக நடப்பாண்டில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு, தற்போது அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல சம்பா சாகுபடியை பொருத்தவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 800 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தாளடி சாகுபடியை பொருத்தவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து முன்னூற்று அறுபது ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சம்பா சாகுபடி பயிர்களுக்கு அடி உரம் தெளிக்க வேண்டிய அவசியத்தில் விவசாயிகள் உள்ளனர்


திருவாரூரில் சம்பா சாகுபடி செய்ய கடும் உரத்தட்டுப்பாடு...!

குறிப்பாக யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற அடி உரங்களை 30 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா பயிர்களுக்கு தெளித்தால் தூர் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் மாவட்டம் முழுவதும் இந்த மூன்று உரங்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மானிய விலையில் அரசு சார்பில் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது உரங்களின் கையிருப்பு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கான யூரியாவின் தேவை 16 ஆயிரத்து 376 மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆனால் தற்போதைய கையிருப்பு 2956 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது. இதேபோல டிஏபி இன் தேவை 6 ஆயிரத்து 764 மெட்ரிக் டன்களாக உள்ளநிலையில் 2030 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பில் உள்ளது. பொட்டாஷ் உரத்தின் தேவையும், கையிருப்பும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளது.


திருவாரூரில் சம்பா சாகுபடி செய்ய கடும் உரத்தட்டுப்பாடு...!

முதற்கட்டமாக 40 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு அடி உரங்கள் இட வேண்டிய தேவையில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் உரங்களின் தட்டுப்பாடு விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா காரணத்தினால் விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு, அதேபோல பொருளாதார பாதிப்பு என பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாடு விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரத்தட்டுப்பாடு தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கையிருப்பில் உள்ள உரங்களை தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்து அளித்து வருவதாகவும், தேவையான உரங்களை பெற்றுத்தர தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். உரம் போன்ற இடுபொருட்களின் விற்பனை என்பது மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தேவையான உரங்களை பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Embed widget