மேலும் அறிய

திருவாரூரில் சம்பா சாகுபடி செய்ய கடும் உரத்தட்டுப்பாடு...!

’’திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கான யூரியாவின் தேவை 16,376 மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில் தற்போதைய கையிருப்பு 2,956 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது’’

காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று போக சாகுபடிகளான குறுவை, சம்பா, தாளடி போன்ற நெற்பயிர் சாகுபடிகள் நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை காவிரி நீர் பிரச்சினை காரணமாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாததால் ஒரு போக சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக உரிய நேரத்தில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக நடப்பாண்டில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு, தற்போது அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல சம்பா சாகுபடியை பொருத்தவரை 2 லட்சத்து 30 ஆயிரத்து 800 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 800 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தாளடி சாகுபடியை பொருத்தவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து முன்னூற்று அறுபது ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது வரை 2000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது சம்பா சாகுபடி பயிர்களுக்கு அடி உரம் தெளிக்க வேண்டிய அவசியத்தில் விவசாயிகள் உள்ளனர்


திருவாரூரில் சம்பா சாகுபடி செய்ய கடும் உரத்தட்டுப்பாடு...!

குறிப்பாக யூரியா, டிஏபி, பொட்டாஷ் போன்ற அடி உரங்களை 30 முதல் 40 நாட்கள் வயதுடைய சம்பா பயிர்களுக்கு தெளித்தால் தூர் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கிடைக்கும். ஆனால் மாவட்டம் முழுவதும் இந்த மூன்று உரங்களுக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேளாண் விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக மானிய விலையில் அரசு சார்பில் உரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது உரங்களின் கையிருப்பு மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. திருவாரூர் மாவட்டத்திற்கு மட்டும் சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளுக்கான யூரியாவின் தேவை 16 ஆயிரத்து 376 மெட்ரிக் டன்னாக உள்ளது. ஆனால் தற்போதைய கையிருப்பு 2956 மெட்ரிக் டன் மட்டுமே உள்ளது. இதேபோல டிஏபி இன் தேவை 6 ஆயிரத்து 764 மெட்ரிக் டன்களாக உள்ளநிலையில் 2030 மெட்ரிக் டன் மட்டுமே கையிருப்பில் உள்ளது. பொட்டாஷ் உரத்தின் தேவையும், கையிருப்பும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளது.


திருவாரூரில் சம்பா சாகுபடி செய்ய கடும் உரத்தட்டுப்பாடு...!

முதற்கட்டமாக 40 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு அடி உரங்கள் இட வேண்டிய தேவையில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் உரங்களின் தட்டுப்பாடு விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது. ஏற்கனவே கொரோனா காரணத்தினால் விவசாய தொழிலாளர்கள் தட்டுப்பாடு, அதேபோல பொருளாதார பாதிப்பு என பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் சந்தித்து வரும் நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் உரத் தட்டுப்பாடு விவசாயிகளுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உரத்தட்டுப்பாடு தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கையிருப்பில் உள்ள உரங்களை தற்போது மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்து அளித்து வருவதாகவும், தேவையான உரங்களை பெற்றுத்தர தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். உரம் போன்ற இடுபொருட்களின் விற்பனை என்பது மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தேவையான உரங்களை பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டின் வேதனை தீர... சொந்த வீட்டு கனவை நனவாக்கும் எளிய ஆன்மிக வழிகள்!
வாடகை வீட்டின் வேதனை தீர... சொந்த வீட்டு கனவை நனவாக்கும் எளிய ஆன்மிக வழிகள்!
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தரிசனம்: வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய தமிழகத்தின் 7 அற்புத ஆலயங்கள்!
விக்னங்கள் தீர்க்கும் விநாயகர் தரிசனம்: வாழ்க்கையில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய தமிழகத்தின் 7 அற்புத ஆலயங்கள்!
தஞ்சை மண்ணில் சிறகடிக்கும் விமானக் கனவு: விரைவில் வானில் பறக்கப்போகும் 'சோழ நாட்டுப் பறவைகள்'!
தஞ்சை மண்ணில் சிறகடிக்கும் விமானக் கனவு: விரைவில் வானில் பறக்கப்போகும் 'சோழ நாட்டுப் பறவைகள்'!
Thanjavur power cut: தஞ்சை மக்களே நாளை 16.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது – ஆமாங்க மின்தடை அறிவிப்பு வெளியாகி இருக்கு
Thanjavur power cut: தஞ்சை மக்களே நாளை 16.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது – ஆமாங்க மின்தடை அறிவிப்பு வெளியாகி இருக்கு

வீடியோ

Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
Mdmk dmk alliance Break : திமுக-வுக்கு டாட்டா? ரூட்டை மாற்றும் வைகோ உடையப்போகும் கூட்டணி?
Singappen Task Force : பெண்ணிடம் சில்மிஷம்! சீறிப்பாய்ந்த சிங்கப்பெண் படை! சிவகாசியில் நடந்த ACTION
Child Abuse : கும்மிடிப்பூண்டி கொடூரம்குழந்தை பாலியல் வன்கொடுமை! உண்மையை உடைத்த காவல்துறை!
Bungee Jumping Accident | உயிரைப் பறித்த BUNGEE JUMPING! கயிறு கட்ட மறந்த ஊழியர்கள்..பரிதாபமாக உயிரிழந்த பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Stalin: கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
கண்டுகொள்ளாத எடப்பாடி..! அதிமுகவிற்காக கவலை கொள்ளும் ஸ்டாலின் - ஃபோன் போட்டு ஆறுதல்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
திமுக - அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்ட தேமுதிக சுதீஷ்.. உண்மையை சொன்ன சண்முகம்
Power Cut: 2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? போட்டுடைத்த CITU
2024, 25ல் கூட இதே நிலைமை தான்..! நள்ளிரவு மின் தடைக்கு உண்மையான காரணம் என்ன? - போட்டுடைத்த CITU
Jayakumar: நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
நள்ளிரவில் விஜய்க்கு பாடம் எடுத்த ஜெயக்குமார்..! டெபாசிட் பெறுவது எப்படி? TVK பதிலடி
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல், பலத்த காற்று..! 9 மாவாட்டங்களில் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
US Iran Deal Vs Israel: இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
இவங்க முடிக்க விட மாட்டாங்க போலயே.! “அமெரிக்கா-ஈரான் டீல் எங்கள கட்டுப்படுத்தாது“ - இஸ்ரேல் அறிவிப்பு
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்; விஜய்க்கு கோரிக்கைகளை அடுக்கிய பா.ரஞ்சித் - என்னென்ன?
IPS Transfer: 56 ஐபிஎஸ் அதிகாரிகள்! கொத்தாக டிரான்ஸ்பர் செய்த தவெக அரசு - யார்? யார்? எங்கே?
IPS Transfer: 56 ஐபிஎஸ் அதிகாரிகள்! கொத்தாக டிரான்ஸ்பர் செய்த தவெக அரசு - யார்? யார்? எங்கே?
Embed widget