மேலும் அறிய

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேங்கிய மழை நீர் - நிர்வாகத்திற்கு பக்தர்கள் வைத்த வேண்டுகோள்

கிழக்கு கோபுர வாசல் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருப்பு பகுதியில் மற்றும் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். உடனடியாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மழை நீரை வடிய வைப்பதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை  பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை என்பது பெய்து வந்தது.



திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேங்கிய மழை நீர் - நிர்வாகத்திற்கு பக்தர்கள் வைத்த வேண்டுகோள்

திருவாரூர் பெரியக் கோயில் என்றழைக்கப்படும் தியாகராஜ சுவாமி திருக்கோயில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகாரத் தலமாகவும் பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் விளங்கி வருகிறது. திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித்தேர் உலக புகழ் பெற்றது. பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தஞ்சை பெரிய கோயிலை விட பரப்பளவில் பெரியது என்று கூறப்படுகிறது. எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதை அறிய முடியாத அளவிற்கு பழமையான கோயிலும் ஆகும். எனவே இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பரிகாரம் செய்வதற்காகவும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இங்கு வந்திருந்தனர். 



திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேங்கிய மழை நீர் - நிர்வாகத்திற்கு பக்தர்கள் வைத்த வேண்டுகோள்

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் திருவாரூரில் கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு கோபுர வாசல் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிகட்டும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக திருவாரூர் தியாகராஜர் கோயில் ஊழியர்கள் கோயில் வளாகத்திற்குள் தேங்கியுள்ள மழை நீரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை நின்றதால் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
Embed widget