மேலும் அறிய

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேங்கிய மழை நீர் - நிர்வாகத்திற்கு பக்தர்கள் வைத்த வேண்டுகோள்

கிழக்கு கோபுர வாசல் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர் நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக விட்டுவிட்டு கனமழை என்பது பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் குடியிருப்பு பகுதியில் மற்றும் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். உடனடியாக மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மழை நீரை வடிய வைப்பதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை  பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து வைத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை என்பது பெய்து வந்தது.



திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேங்கிய மழை நீர் - நிர்வாகத்திற்கு பக்தர்கள் வைத்த வேண்டுகோள்

திருவாரூர் பெரியக் கோயில் என்றழைக்கப்படும் தியாகராஜ சுவாமி திருக்கோயில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகாரத் தலமாகவும் பஞ்ச பூத தலங்களில் பூமிக்குரிய தலமாகவும் விளங்கி வருகிறது. திருவாரூர் தியாகராஜ கோயில் ஆழித்தேர் உலக புகழ் பெற்றது. பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தஞ்சை பெரிய கோயிலை விட பரப்பளவில் பெரியது என்று கூறப்படுகிறது. எந்த ஆண்டு கட்டப்பட்டது என்பதை அறிய முடியாத அளவிற்கு பழமையான கோயிலும் ஆகும். எனவே இந்த கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பரிகாரம் செய்வதற்காகவும் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு வருவது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக இங்கு வந்திருந்தனர். 



திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தேங்கிய மழை நீர் - நிர்வாகத்திற்கு பக்தர்கள் வைத்த வேண்டுகோள்

இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதல் திருவாரூரில் கனமழை என்பது விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் தியாகராஜர் கோயில் வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக கிழக்கு கோபுர வாசல் பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அதனை கடந்து சாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிகட்டும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபடுவது தாமதமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக திருவாரூர் தியாகராஜர் கோயில் ஊழியர்கள் கோயில் வளாகத்திற்குள் தேங்கியுள்ள மழை நீரை வடிவமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று காலை முதல் திருவாரூர் மாவட்டத்தில் மழை நின்றதால் கோயில் வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்கும் பணியில் இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
விவசாயிகளின் சிறுநீரக ஆரோக்கியம் காக்க தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை சிறப்பு திட்டம்
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூரில் டீ, காபி விலை உயர்வு! எரிவாயு தட்டுப்பாடு, விறகு விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
இருப்பதுதான் கிடைக்கும் ... உணவகங்கள் அதிரடி: தவிக்கும் பேச்சுலர்கள்
ABP Premium

வீடியோ

Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?
Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
இந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக? 5 ஆண்டுகளில் அறநிலையத்துறை செய்தது என்ன?
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
Assembly Election 2026: ஒரு மாசம்கூட இல்லயே.. கேரளா, பாண்டிச்சேரி, அசாமில் பதறும் அரசியல் கட்சிகள்!
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
TN Election Date 2026: வெளியானது அறிவிப்பு; ஏப்.23 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்.. முடிவு எப்போ? தேதி குறித்த ஆணையம்
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
மதுரையில் பயங்கர தீ விபத்து: 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.. காரணம் என்ன?
Assembly Election 2026: வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
வெளிப்படைத் தன்மையுடன் தேர்தல்; 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகள்; தேர்தல் ஆணையத்தின் தலையாய முயற்சி
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே
Nexon Vs Brezza EMI Plan: டாடா நெக்ஸான் Vs மாருதி பிரெஸ்ஸா; EMI-ல எந்த கார வாங்குறது மலிவா இருக்கும்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
டாடா நெக்ஸான் Vs மாருதி பிரெஸ்ஸா; EMI-ல எந்த கார வாங்குறது மலிவா இருக்கும்.? வாங்க தெரிஞ்சுக்கலாம்
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Madurai ; தமிழகத்தில் போதை கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்கேடு: மருத்துவர் சரவணன் வேதனை!
Embed widget